Monday, September 6, 2010

Share

என் இதயம்....

 நேற்று என்னை பிடித்த அவளுக்கு
ஏனோ இன்று பிடிக்கவில்லை
யோசிக்கிறேன் புரியவில்லை
என் இதயத்துக்கு

என் உயிர் நீ என்றாள்
என் உறவு நீ என்றாள்
எல்லாம் நீயே என்றாள்
ஆனால் இன்று???

ஆயிரம் புன்னகை சிந்தும்
அவள் உதட்டில்
இன்று தொடரும் நிசப்தம்
ஏனோ புரியவில்லை எனக்கும்...

சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்
ஆனால் நீயோ
மெளனமொழி பேசி பேசி
கொல்லாமல் கொல்வதேனோ??

காரணம் தெரியாமல்
விம்மி அழுகிறது
என் இதயம்....