Tuesday, November 30, 2010

Share

பாவையிவள்...

 பாத்தேன் உன்னை
பார்வையால் கவர்ந்தாய்
பாசம் எனும் வனத்தினிலே
பாலைவன என் வாழ்வில்
சோலைவனமக்கிடுவாய்
சோதைனைகள் தீர்த்திடுவாய்
என்றெல்லாம் வாக்கு தந்தாய்
வஞ்சகர் வார்த்தையிலே
வலுவிழந்த உன் காதல்


காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...

Sunday, November 28, 2010

Share

காதல் வலியுடன் இவள்..

 கண்ணை கட்டி
கடலில் விட்டால்-உண்மை
காதல் செத்திடுமா?
வெள்ளை உடை உடுத்திட்டாள்
விதைவை என்று ஆகிடுமா?

 மனதில் வாழும் மணாளனுடன்
மங்களமாய் வாழ நினைத்த இவளை
போலி சம்பிரதாயம்
பொட்டகம் கட்டி ஒதுக்கியது
அவளை மட்டுமல்ல
அவள் உணர்வுகளையும்..

Friday, November 26, 2010

Share

ஆருயிரே...!

 இரவின் மடியில்
மதி உன் நினைவில்
வானம் நோக்கி
உன் வருகைக்காக
காத்திருக்கையில்
நிலவென ஒளி வீசி
நட்சத்திரங்களாய் பிரகாசித்து
முகிலினில் துயில் கொள்ள
விளைகின்றாய் ஆருயிரே...!

Monday, November 22, 2010

Share

ஓர் பெண்ணின் கதை....

 அலைகள் தொடும் கரையினிலே
கரை தொடும் அலையினை ரசித்தபடி
கற்பனை அலைகளை  மனமெனும்
கரையினில் மோத விட்டு
காத்திருந்தாள் அவனுக்காய்...


ஒருதலைக்காதலாய்
வளர்த்திட்ட அவள் முடிவை
அவனிடம் சொல்லிட
அழைத்திட்டாள் அவனை
அழைப்பை ஏற்ற அவனுக்காய்
காத்திருந்தாள் கடற்கரையினிலே.......


எதிர்கால வாழக்கையினை
ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும்
என்றெண்ணியவளாய் திரும்பினாள்
எதிரினிலே அவன் நின்றான்.....


அவனை பார்த்தவுடன்
அவசரமாய் எழுந்து நின்றாள்
ஆவலுடன் அவன் நலம் அறிந்து
அமரும்படி அழைத்திட்டாள்......


இடைவெளியுடன் இருவரும்
இரு கல்லில் அமர்ந்திட - அவன்
இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட
இவள் பார்வை அவனை  நோக்கி ஏக்கத்துடன்....


 
  
ஆறு வருடங்களாக -அவன்
ஆருயிர் நண்பனாய் அவள் வாழ்வில்
அவள் உள்ளம் அறிந்தவனாய்....
காலங்கள் ஓடுகையில்....


சுற்றத்தார் பார்வை தப்பாகிட
சுற்றுகிறாள் அவனுடன்  என்றிட
சூறாவளியாய் அவள் மனம்
சுதாரிப்பின்றி  தனிமையில்.....


பிறர்  சொல் கேட்டு
பிறந்திட்ட உடன் பிறப்புக்கள்
பிணைந்திட்ட சந்தேகத்தில்
சொந்தங்கள் நடுவினிலே
பரிதவித்தாள் தனிமையிலே....


உடன் பிறந்த உறவுகளே
உஷ்ணமாய் நோக்குகையில்
உறவுகள் அன்பை விட - நட்பாய்
உள்ளம் அறிந்த அவனை
உடையவன் ஆக்கிட எண்ணினாள்...


தனது விருப்பத்தை
தனிமையில் அவனிடம்
சொல்லிட எண்ணியவள்
அழைத்தால் தொலைபேசியில்
அனுமதியை பெற்றவுடன்
அவளிடத்தில் உற்சாகம்.


அனைத்தும் அறிந்தவன் போல்
அவன் பார்வை அவளை நோக்கிட
அழைத்ததன் காரணத்தை
அன்பாக வினவினான்..


மோதிய கற்பனைகளை
மொத்தமும் மறந்தவளாய்
உதடுகள் தடுதடுக்க
கண்களில் ஆறுபோல்
கண்ணீர் ஊற்றெடுக்க...
நடந்தவைகளையும்
 நடக்க வேண்டியவகளையும்
நாவு தடுதடுக்க  கூறிமுடித்தாள்...


சில நொடிகள் மெளனமாய்
சிந்தனையில் மூழ்கியவன்....
மெளனம் கலைந்தவனாய்
தலை நிமிர்ந்து அவளை நோக்க
அவள் பார்வை  முடிவை வினவ
தன்னம்பிக்கை ஊட்டியவனாய்
தன் முடிவை செப்பினான்.....


தூற்றுவார் தூற்றட்டும்
தூறலில் முளைத்த செடியாய் -எம்
வாழ்வை  தொடருவோம்
தீர்க்கமாய் தன் முடிவை
செப்பினான் அவளிடத்தில்....


  வீண்பழி கூறியோர் வியந்திட
வாழ்ந்திடுவோம் எனும் அவன்
வார்த்தை அவள் மனதில் நம்பிக்கை
வார்த்திட  பெருமூச்சை விட்டபடி
அவன் தோளில் அவள் சாய்ந்தாள்.....

Friday, November 19, 2010

Share

நட்பு...

நினைக்கும் பொழுதிகளில்
கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும் தோழியே
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...

Monday, November 15, 2010

Share

எல்லாம் கனவாக போச்சு.......

 அன்றொரு நாள்
பூத்துக் குலுக்கும்
பூங்காவனத்தில்
நான் மட்டும் தனிமையில்
என் நினைவலைகளை
அவிழ்ந்து விட்டு
பெரு மூச்சோடு நான்...

எங்கும் நிசப்தம்
திடீரென...
யாரோ என்னை
அழைப்பது போல
நினைவுகளுக்கு ஓய்வு கொடுத்து
கூப்பிட்ட ஓசையை நோக்கி
பார்வைச் செலுத்தினேன்
என் கண் முன்
ஒரு அழகான தேவதை
ஒரு கணம் சொக்கி தான் போனேன்
எனக்கு இப்படி ஒரு அதிஷ்டமா...

மொட்டொன்று அவிழ்ந்து
இதழ் விரிப்பது போல
கட்டழகி உதட்டில்
புன்னகைகளை சிந்துகின்றாள்
என் பெயர் சொல்லி அழைத்து
உறைந்து போய் இருந்த என்னை
தான் அருகில் இருப்பதை
தெரியப்படுத்துகின்றாள்.

ஏதோ நானும் சுதாகரித்துக் கொண்டு
என் வினாவை தொடக்கும் முன்- அவளோ
தூறலின் பின் பெய்யும்
பெரும் மழையென
தன் மனதில் உள்ளவைகளை
கொட்டித் தீர்க்கின்றாள்.


'அவள் இதழோர புன்னகை
குறு குறு பார்வை
படபடக்கும் உன் இதயம்
இவற்றுக்கு முன்னால்
பறந்து தான் போகின்றேன்
பட்டாம் பூச்சியென"
என் கற்பனைகள்...

அவளும் காதலலை சொல்ல
நானும் அதனை ஆமோதிக்க
பரவசமாக நகர்கின்றது நாளிகைகள்
நேரங்களும் தேய்கின்றது
நெருக்கமோ அதிகரிக்கின்றது.
அவளோ நாணத்தில்
நானோ மயக்கத்தில்
சொர்க்கத்தை பிரசவிக்கும்
தருணத்தில்..
யாரோ என்னை 
தட்டுவதுபோல் உணர்வு
திடுக்கிட்டு விழிக்கின்றேன்
எல்லாம் கனவாக போச்சு..

Saturday, November 13, 2010

Share

உன்னைக் காதலிப்பதால்....

 இரவின் மடியில் நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே...
உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே...
பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே...
குருடர் கூட ஒளியைப் பெறுவார்
உன் விழியின் அருகில் நின்றாலே...
ஊமை கூட வாயைத் திறப்பான்
உன்இனிய பெயரைக் தான் சொல்ல..
உன்னை படைத்த பிரமன் கூட
ஒடி வருவான் உன் பின்னாலே...
இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே...
அத்தனைக்கும் ஓர் காரணம்
நான் உன்னைக் காதலிப்பதனால் தானே........

Wednesday, November 10, 2010

Share

மானசீக காதல்....

 உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் மறக்கமுடிவில்லை...
உன்னை வெறுக்கத்தான்
கோவமாய் நடிக்கிறேன் 
வெறுக்க முடியவில்லை....
உன் பேச்சு வன்மையால்
என்னைக் கவர்ந்தாய்...
உன் ஆசை வார்த்தையில்
என்னைக் கொன்றாய்....
நீ என்னை வர்ணிக்கும் போது - நாணம்
என்னைக் கட்டிப் போடுகின்றது....
என் பார்வையில் நீ தோன்றுகிறாய்
என் சுவாத்தில் நீ கலக்கிறாய்
என் எண்ணங்கள் உன் நினைவால்
தடம் புரள்கின்றது....
நீ என்னைக் காதலிக்கிறாய் என்று
என்னால் உணர முடிகிறது..
நினைப்பது சுலபம் மறப்பது கடினம்
என்று எனக்கும் புரிகின்றது...
நினைப்பது நடக்காது என்று தெரிந்தும்
நாம் காதலிப்பது எப்படி?
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்...

Monday, November 8, 2010

Share

என் அன்னை

சுமையாக வந்த என்னை
சுகமாக ஏற்ற தாயே
உன்னை உருக்கி என்னை
வடித்த சிற்பி நீயே
உன் பசியை மறந்து
என் பசியை போக்கியவளே
நாம் அம்மா என்று அழைக்கையில்
அடிவயிறு குளிர்ந்தவளே
முதல் அடி  எடுத்து வைக்கையில்
என்னை ஆயிரம் முத்தமிட்டு
அரங்கேற்றம் செய்தவளே
உனக்கு அபிஷேகம் செய்தாலும்
என் அன்னை உனக்கு
நான் செய்யும் நன்றி
போதாதம்மா.....

Wednesday, November 3, 2010

Share

தீபாவளி வாழ்த்துக்கள்

இணையத்தில் உலவிடும்
இனிய நண்பர்களுக்கு-வாழ்வில்
இன்பங்கள் பல பெற்று
இனிதே வாழ்ந்திட
இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்...

அன்புடன்:- தோழி பிரஷா
Share

உறவின் வலிமை

 இன்று நானாக நானில்லையே
ஓயாத உன் நினைவலைகள்
என் இதயத்தில் போதுகின்றன.
கவலைகள் ஆட்கொள்ளும்
தருணங்களில் கவிதைகள்
பிறக்கின்றன என்னுள்
அந்த கவிதையிலும்
நீயே வாழ்வதால்
முடிவின்றி தொடர்கின்றது
உணர்வுக்கும் அன்புக்குமான
போராட்டம்..
நீர்க்குமிழ் போல் நிலையில்லாத
இந்த வாழ்க்கையில்
எனக்கும் உனக்கும்
ஏன் இந்த பாச பிணைப்பு...
நீயும் நிம்மதியில்லை
நானும் நிம்மதியில்லை
ஏன் இந்த
பாச போராட்டம் நமக்குள்
விடையில்லா இவ் உறவுக்கு
முற்றுப் புள்ளி வைக்க
முயற்சிக்கின்றேன்
முடியவில்லை என்னால்....

Monday, November 1, 2010

Share

கனவு காதல்....

பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?
நிஐங்கள் அழிவதில்லை என்றாய்
என் நிஐ அன்பை
இன்னும் ஏன்
உணர மறுக்கிறாய்?
கனவுகள்
நிஐமாவதில்லை தான்..
ஆனால்
நிஐங்களைவிட
கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
கனவில் தான்
நீ என்னோடு
நீண்ட தூரம் பயணிக்கிறாய்
என்பதால்!