ஆயிரம் வார்த்தைகளால் -என்னை
புரிந்திட வேண்டினேன் உன்னிடம்
புரிந்தும் புரியாமல் புலம்புகின்றாயா?
புரிந்தும் ஏற்க மறுக்கின்றாயா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
தோழனாய் எப்போதும் தோள் கொடுத்தாய்
நல்லவை தீயவை எடுத்துரைத்தாய்
காதலனாய் என்னை அரவணைத்தாய்
இன்று என்னை புரிய மறுக்கின்றாய்
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
பாசத்தால் வேலியிட்டாய் அன்று
பாசத்தை வேசமென்கின்றாய் இன்று
பங்குபோட பாசமென்ன விலைப்பொருளா?
உறவுகள்மேல் பாசம் கொள்வது தவறா?
உன்னைமட்டு நேசியென்பது நியாயமா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
வாழ்க்கையின் ஆணிவேர் நம்பிக்கை-அதனை
புடுங்கி எறிகின்ற கோடாரியாய் சந்தேகம்
எதிலும் சந்தேகம் கொள் தீர்விருக்கும்
பாசம்மேல் சந்தேகம் கொண்டாய் என்ன செய்வேன்
புரியவைக்க முடியவில்லை
புலம்புகின்றேன் தனிமையிலே
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
உன் குழப்பத்திற்கு விடைதேடி
வினவினேன் வினாக்களை என்னிடம்
விடை கண்ணீராய் விழிவழியே.
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
.....................................................................
நட்பாயிருக்கையில் நம்பிக்கைகொள் நட்புமேல்
காதலராயிருக்கையில் நம்பிக்கைகொள் காதல்மேல்
கணவனாயிருக்கையில் நம்பிக்கைகொள் மனைவிமேல்
மனைவியாய் இருக்கையில் நம்பிக்கைகொள் கணவன்மேல்
நல்ல தந்தை தாய் இருக்கையில் நம்பிக்கைகொள் பிள்ளைமேல்
பாசமாய் நீ இருக்கின்றாயா? பாசம்மேல் நம்பிக்கைகொள்
உண்மை உறவுகள்மேல் நம்பிக்கைகொள்
சந்தேகம் உன்னை நெருங்காது.
............................................................................