Thursday, March 31, 2011

Share

முடியவில்லை என்னால்.!!!!

ஆயிரம் வார்த்தைகளால் -என்னை
புரிந்திட வேண்டினேன் உன்னிடம்
புரிந்தும் புரியாமல் புலம்புகின்றாயா?
புரிந்தும் ஏற்க மறுக்கின்றாயா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


தோழனாய் எப்போதும் தோள் கொடுத்தாய்
நல்லவை தீயவை எடுத்துரைத்தாய்
காதலனாய் என்னை அரவணைத்தாய்
இன்று என்னை புரிய மறுக்கின்றாய்
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


பாசத்தால் வேலியிட்டாய் அன்று
பாசத்தை வேசமென்கின்றாய் இன்று
பங்குபோட பாசமென்ன  விலைப்பொருளா?
உறவுகள்மேல் பாசம் கொள்வது தவறா?
உன்னைமட்டு நேசியென்பது நியாயமா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


வாழ்க்கையின் ஆணிவேர் நம்பிக்கை-அதனை
புடுங்கி எறிகின்ற கோடாரியாய் சந்தேகம்
எதிலும் சந்தேகம் கொள் தீர்விருக்கும்
பாசம்மேல் சந்தேகம் கொண்டாய் என்ன செய்வேன்
புரியவைக்க முடியவில்லை 
புலம்புகின்றேன் தனிமையிலே
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!

உன் குழப்பத்திற்கு விடைதேடி
வினவினேன் வினாக்களை என்னிடம்
விடை கண்ணீராய் விழிவழியே.
 புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!


 .....................................................................

நட்பாயிருக்கையில் நம்பிக்கைகொள் நட்புமேல்
காதலராயிருக்கையில் நம்பிக்கைகொள் காதல்மேல்
கணவனாயிருக்கையில் நம்பிக்கைகொள் மனைவிமேல்
மனைவியாய் இருக்கையில் நம்பிக்கைகொள் கணவன்மேல்
நல்ல தந்தை தாய் இருக்கையில் நம்பிக்கைகொள் பிள்ளைமேல்
பாசமாய் நீ இருக்கின்றாயா? பாசம்மேல் நம்பிக்கைகொள்
உண்மை உறவுகள்மேல் நம்பிக்கைகொள்
சந்தேகம் உன்னை நெருங்காது.
............................................................................

Monday, March 28, 2011

Share

முத்தம்...

முத்தம் இதன் அர்த்தம்
அவர் தத்தம்
உறவுகளுக்கேற்ப
நித்தம் நேசிக்கப்படுகிறது

அன்பு நெஞ்சங்களாய்
அளவிட முடியாத
அன்பின் ஆழமதை
அள்ளியே வழங்கிடுவர்
அன்பு முத்தத்தினால்

கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்

பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..

கூடப் பிறந்தோரும்
கூடி ஓடி விளையாடுவோரும்
கூட வரும் உறவுகளும்
கொடுத்து பரிமாறிடுமே

பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...

அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்.

Thursday, March 24, 2011

Share

மகா கவி...!


எட்டைய புரத்திலே
ஏழ்மையின் மடியிலே
ஆதிபகவானுக்கு
அலுக்காமல் தொண்டு செய்யும்
அந்தனர் குலத்திலே அவதரித்தாராம்..


மலர்ந்த முகத்துடன் கூடிய
முறுக்கு மீசையிலே
தெரிவது தோற்றமட்டுமல்ல
தெளிந்த உணர்வுகளும்


ஆண்டவன் கொடையாம்
இயற்கையை வியந்தான்
ஆதிசக்தி அன்யை
அருள் வேண்டியே புகழ்ந்தான்
ஓடி விடையாடும் குழந்தையை
கூடியே பாடி விளையாட
பறவைகள் பண்பினை
பாடலாய் பாடினான்


அறியாமல் கொண்டே
அடங்கிய சமூகத்தில்
அடங்கிய பெண்மையினை
வெளியே கொண்டு வர
அறிவினை ஊட்டியே
புரட்சியை நடத்தினார்.


ஏழ்மையை மறந்து
ஏற்றத் தாழ்வின்றி
எம்மினம் வாழ்ந்திட
சாத்திரம் அளித்தே - புது
சரத்திரம் படைந்தார்


கலைகளில் திகழ்ந்வன்
கண்ணமைமிதினிலே
காதலில் விழுந்தே - அவள்
கைத் தலம் பற்றினான்


அஞ்சியே வாழ்ந்ததற்கு
அஞ்சாமை ஊட்டியவன்
ஆர்வம் மிகுதியால்
ஆபத்தை ஏற்றான்


புரட்சிக் கவியிலே விஞ்சியவன்
மதம் மிஞ்சியே நின்ற
யானை அருகினில்
அஞ்சாது சென்றமையால்
பஞ்சாய் தூக்கியே
பரலோகம் சேர்ந்திற்று
மலர்ந்து மணம் பரப்பி
மக்கள் மனதில்
இடம் பிடித்தமையால்
மஹா கவியானர் 
பாரதியார்..


Tuesday, March 22, 2011

Share

விதியின் வழியில்..



வாழ்வின் எல்லையை அறியாத
தொல்லைகள் புரியாத
துள்ளித் திரிந்திட்ட
பிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தை கொடுத்தவள்
கொள்ளை இன்பத்தில்
காதல் வளர்த்தாள்

கள்ளத்தனமின்றி
உள்ளச் சோகத்தோடு
செல்லக் கதைதனையும்
சேர்ந்தே பயின்றதினால்
சொர்க்கத்தின் படிகளில்
செல்கின்ற சந்தோசம் - அவள்
உள்ளத்தில் பளிச்சிட்டது

வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்

உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை....!

Sunday, March 20, 2011

Share

வழிகாட்டி..



தோழனாக வந்து
தோள் கொடுத்து உதவியவன்
தோல்வியேதும் வந்திடாது - அவள்
வாழ்வு துலக்கிடவே
தூதனானான் அவள் வாழ்வில்..

வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்

திடமான வாழ்வுக்காய்
உரமுட்டிய வார்த்தையால்
வளமுடனே செழிந்து
ஓங்கியது அவள் வாழ்வு....

Thursday, March 17, 2011

Share

புது வாழ்வு...

 காதல் என்னும் பாடத்தை
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...


கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...


Monday, March 14, 2011

Share

புரியாமல் புலம்புகிறேன்

 வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்

தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து

புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்

தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்

கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....

Friday, March 11, 2011

Share

அப்பா...

  நாம் தழைக்கவென
தன் தலைமுறையை தனதாக்கி
தன் மார்பில் எனை தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே
என் தந்தை

எடுத்தடி எடுத்து வைக்கையிலும்
ஏடுடெடுத்து படிக்கையிலும்
என்னருகே தானிருந்து
தன் வலியாய் தாங்கிட்டார்
என் வலிகள் அத்தனையும்

முதல் எழுத்துடனே உறவின்          
முகவரி அளித்து - அன்பின்
முழு உருவாய் அன்னையுமாய்
ஆசானுமாய் அரவணைத்தே
அகிலமதில் அடி எடுத்து வைக்க
அரண்மனை அமைந்த அன்புருவே

அடி எடுத்து வைத்த நாள் முதல்
படிகள் பல தாண்டி நான்
பயணிப்பதை பார்ப்பதற்கு - முன்னே
பறி கொடுத்தால் உம்மை
பரி தவிக்கின்றேன் இங்கு

ஈருவாய் இவ்வூலகில்
இன்னல்கள் பல தாண்டி
இணையற்ற அன்பளித்தே
இரவு பகல் எனை சுமந்த
உம் உதிரத்தில் உதிந்தபுத்திர(ரி)ன்-நான்
இவ்வூலகத்தில் என்றும்
உத்தம(மியா)னாய் புகழ்பரப்பி
வாழ்ந்திடுவேன்....

Monday, March 7, 2011

Share

பெண்மணிக்காக..

 கருவறையில் ஆரம்பித்த
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது - இந்த
விஞ்ஞான உலகத்திலே

புதிய பொழுதோடு
மலர்ந்திட்ட மங்கையர்கள்
புரிகின்ற செயல்கள் பல
புரியாத புதிராகவே தொடர்கின்றன

அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்

அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்

பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று

தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..


Share

உன் மனசு போல....



நான் சந்திக்கும் ஒவ்வொரு 
கடினமான கணபொழுதுகளையும்
எவ்வாறு சமாளிப்பேன்
உன் துணையின்றி...

தடுமாறும் தருணங்களில்
தலை தடவி
ஆறுதல் தரும்
தாயாய் இருந்த நீ
தவிக்க விட்டு செல்வதன்
காரணம் தான் புரியாமல்
புலம்புகின்றேன் பித்தனாய்

உணர்வினை பகிர்ந்து - உண்மை
அன்பினை பொழிந்த - நீ
உதறிட்ட பின்பும் - என்
உடலின் ஓர் அணுவும்
உன் நினைவின்றி அசையாதாம்

என் உடலாயிது - அதில்
உயிர் தான் இருக்கிறதா
உணரக் கூட முடியவில்லை 
ஏனெனில்!
உயிரை ஒப்படைந்து விட்டதால்
எப்பவோ உன்னிடத்தில்..

மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...

Friday, March 4, 2011

Share

யார் தருவார்?

பெற்றவள் இங்கு
நீண்ட தூரம் சென்றதனால்
நித்தமும் நடங்குதிங்கே
முடிவற்ற பாச போராட்டம்

நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...!

உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..

என் சொந்த வாழ்க்கையில்
சேர்ந்திட்ட சோகமிதை
சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
சீர் செய்யத் தான் முடிந்திடுமா?

பணம் பொருள் பார்த்தாச்சு
சொத்து சுகம் சேர்ந்தாச்சு
இத்தனையும் இருந்தென்ன
உற்றதுணை தானிருந்து-என்
உள்ளத்து உணர்வுகளை
உளமாறபரி மாறும்
உண்மை அன்பை யார் தருவார்?
...............................................................................................................................

..............................................................................................................................

Wednesday, March 2, 2011

Share

நங்கை உன் கையிலே..!

 பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ

தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே

கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு

முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்

புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்

மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்

நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே