Friday, December 31, 2010

Share

புதுவருட வாழ்த்துக்கள்

 அதிசயங்கள் பல நிகழ்த்தி
சாதனை பல புரிந்து
சோதனைகள் வேதனைகளை
ஏற்படுத்தி இனிதே
விடைபெறும் 2010 ஆண்டே
இன்முகத்துடன்
வாழ்த்துச் சொல்லி
வழியனுப்பி வைக்கின்றோம்....
  புத்தொளி பரவி நிற்க
புது வசந்தம் வீசி வர
இன்னல்கள் பறந்தோட
இன்பத் தென்றல் எமை வருட
வல்லமைகள் கரம் சேர்ந்த
வாழ்வெங்கும் மகிச்சி பொங்க
வருக வருக புத்தாண்டே....
 பிறக்கும் புத்தாண்டு  புனிதமாய் 
புதுமை புரட்சியோடு 
உங்கள் வாழ்கையில்
வசந்த காற்று வீசி வளமாக வாழ
இறைவனை வேண்டி.....
பிறக்கும் இப்புத்தாண்டில்
வளங்கள் பல பெற்று வாழ
உளமார வாழ்த்துகின்றேன்
என் இணைய நண்பர்களே.....

உங்கள் தோழி பிரஷா

Wednesday, December 29, 2010

Share

வாழ்க்கையின் விலை...

 திருமணம் என்பது
இருமனங்கள் இணையும்
பந்தம் என்றார்கள் - இல்லை
அதில் உண்மை...
இஸ்டப்பட்ட இதயங்களை
இணைய விடாது தடுப்பது
கண்களில் கலந்து
கருத்தெருமித்து
காதலால் சேர்ந்தவர்களை
பொன் பொருள் வேண்டி
பேராசை கொண்டு
விலை மதிப்பிட்டு
சந்தையில் விந்திடும்
சங்கடம் இது...........

Tuesday, December 28, 2010

Share

எனதாகி...

அவர்கள் எல்லோரும்
உன்னை
வலுக்கட்டாயமாக
காதலிடம் சரணடையச்
சொன்னார்கள்
நீ என்னிடம்
சரணடைந்த சேதி
தெரியாமல்.....

Saturday, December 25, 2010

Share

ஆழிப்பேரலையே..

 ஆழிப்பேரலையாய்
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....

இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....

உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...

ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை  இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....
ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு...
அஞ்சலி செலுத்திடுவோம்...

Friday, December 24, 2010

Share

முத்தம்

 கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை

உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்

சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது

அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது...

Wednesday, December 22, 2010

Share

என்னுள் காதல்............

 ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்....

குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....

இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...


Monday, December 20, 2010

Share

உன் சந்தேகத்தால்

 உன் சந்தேகத்தால்
உடைந்து என் மனம்
உருகுகிறது என் உள்ளம்
ஊமையாய் என் உதடுகள்
உயிரின்றி என் உடல்
ஊசலாடுது தனிமையில்..

நம்பிக்கையாய் இருந்தும்
நம்பிக்கை இழந்தவளாய்..
நாடி நரம்புகள் சோர்கின்றன-இனி
நான் இருந்தென்ன பயன்
இறக்கின்றேன் உனக்காக...
Share

உன் காதலினால்......

 அன்பே
உன் உணர்வுகளில்
புரிந்து கொள்ள முடியாத காதலை
உன் கவிதைகள்
என்னை ஸ்பரிக்கையில்
புதிதாய் பிறக்கின்றேன் இன்று
என்னில் இனம் புரியாத இன்பம்
ஒட்டிக் கொண்டதாக உணர்கின்றேன்
புதிதாய் ஒன்றை சுமப்பது போல
இதயம் பட படக்க
இரத்த நாளாங்கள் துடி துடிக்க
என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......

Friday, December 17, 2010

Share

தனிமையில் நான்..

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டது மதிகெட்ட பேதை உனக்கு(02) இதற்கான பதில் கவிதை அவளால் எழுதப்பட்டது.... யாவும் கற்பனை)
 
உன்னருகில் இருக்கையில்-உன்னை
புரிந்திடா என் உள்ளம்
உன் வார்த்தை வரிகள் கண்டு
சிலிர்க்கிறது உள்மனம்-ஆனால்
உணர்வுகளை பரிமாற முடியா
பாவியாய் நான் இங்கு
தனிமையல் தவிப்பது
உறவுகளுக்கு புரியவில்லை....
உனக்கும் தெரியவில்லை....

உன் காதல் ஊரவர்க்கு தெரிந்திட்டால்
உன் அப்பா கெளரவம்
உன் அண்ணா எதிர்காலம்
உன் தங்கை கல்யாணம் என்றெல்லாம்
ஏசிடும் என் அன்னை- என்
உணர்வை புரிந்திட மறுக்கிறாள்

தனிமையில் நீ அங்கு நானிங்கு
தவிப்புக்கள் ஏராளம் 
மனப்போராட்டங்கள் பல்லாயிரம்
மனதோடு மனம் போடும் போராட்டம்
மங்கையாய் பிறந்திட்டால் இதுதான் தீர்வா?
கண்பார்த்து  உன் மடிசாய்த்து
கண்ணீருடன் என் வேதனைகள்
கூறிட ஆசையடா-ஆனால்
கவி வரிகளில் கூறுகிறேன்
கவனமாய் பார்த்திடு கண்ணீர் சிந்தாமல்

ஆதங்கத்தில் என் மனம் இங்கு
ஏதும் தெரியாம உன்மனம் அங்கு
பகிர்ந்துள்ளேன் உன்னிடம்
பதிலை தந்திடு........

Tuesday, December 14, 2010

Share

மதி கெட்ட பேதை உனக்கு...

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டதாக....யாவும் கற்பனை)
 
 என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? 

(இதற்கான பதில் கவிதை அடுத்த பதிவில்)

Monday, December 13, 2010

Share

உன் நினைவுகள்

தேய்பிறையாய்  என் காதல்-ஆனால்
வளர்பிறையாய் உன் நினைவுகள்
என்னுள்  நித்தமும்
வளர்கின்றன....
 

Saturday, December 11, 2010

Share

உன் மேல் கொண்ட காதலால்....

 உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்

உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால் 
புரிந்து கொள்ள முடியவில்லை.....


Thursday, December 9, 2010

Share

மீண்டும் கிடைத்திடுமா???

  இயற்கை காற்று  அள்ளி வீசம்
இதமாய்  வீசும் காற்றுடன் முல்லை வாசம்
இயற்கையாய் வளர்ந்திட்ட வேப்பமரம் 
சோலை நடுவே எம் வீடு  
சோதனையிலும் சந்தோஷங்கள்
ஆலமரமாய் சொந்தங்கள்  
ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்.....

பட்டினி இருந்திருப்போம் - அப்போதும்
பசி மறந்திருப்போம்
வறுமையிலும் சந்தோஷம் 
வாடிடாத அன்னை முகம்.......

எல்லயைில்லா வானமதில்
எண்ணமுடியா நட்சத்திரங்கள்
நடுவிலே வலம் வரும்
 முழு மதியை ரசத்திருப்போம்
முற்றத்தில் ஒன்று கூடி ....

எம் மண்ணின் இனிய வாழ்வு
கிடைத்திடுமா மீண்டும் ...
சோலைவனமாய் இருந்த இடம்-இன்று
பாலைவனமாய் ஆனதே..

ஆசையாய் வளர்த்திட்ட சோலை இல்லை
இயற்கையாய வளர்ந்திட்ட ஏதுமில்லை
தனித்தனியே  சிதறுண்டது உறவுகள்
தனிமையில் கதறுகிறாள் அன்னையவள்...


"நீர் அடித்து நீர் இங்கு விலகாது அம்மா
நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகலாது அம்மா"



Tuesday, December 7, 2010

Share

துரோகி உனக்காக....

 என் உள்ளமறிந்த நீயே
என்னை விட்டு பிரிந்தாய்
என்னை பிரிந்த உன்னை மட்டும்
என்னால் மறக்கத்தான் முடியவில்லை.. 
உன் நினைவுகள் 
என்னுள் மந்திரமானதால்
துரோகம் நீ செய்தும்
துடிக்கிறது என் இதயம்
துரோகி உனக்காக....

Monday, December 6, 2010

Share

வாழ்வும் இல்லை சாவும் இல்லை...

 சோதனைகள் மட்டுமே சூழலாய்-இதனால்
வேதனைகள் மட்டுமே சுவாசமாய்..
அணைத்திட அன்னை இல்லை...
ஆறுதல் கூற தந்தை இல்லை
கை கொடுக்க சகோதரம் இல்லை
தனிமையில் வேதனைகள்.....

ஆறுதல் சொல்ல ஓர் உயிராய்
அவள் மட்டும் மிஞ்சிட அவளுக்காய்
உயிர்வாழ எண்ணிய என்முன்னே
அவளுடலும் சாய்ந்தது மண் மீது...
போரினால் அனைத்தும் இழந்து
அனாதையாய் நானின்று.....


Friday, December 3, 2010

Share

விழியிலே என் விழியிலே...



 இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....

Thursday, December 2, 2010

Share

நீயிட்ட முத்தங்கள்...

  நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...

Tuesday, November 30, 2010

Share

பாவையிவள்...

 பாத்தேன் உன்னை
பார்வையால் கவர்ந்தாய்
பாசம் எனும் வனத்தினிலே
பாலைவன என் வாழ்வில்
சோலைவனமக்கிடுவாய்
சோதைனைகள் தீர்த்திடுவாய்
என்றெல்லாம் வாக்கு தந்தாய்
வஞ்சகர் வார்த்தையிலே
வலுவிழந்த உன் காதல்


காரணத்தை கூறாமல்
பரிதவிக்க விட்டுவிட்டு
பழிவேறு கூறிச்சென்றாய்
பாவம் என்ன செய்தேன்
புரியல என் வாழ்விலே...

Sunday, November 28, 2010

Share

காதல் வலியுடன் இவள்..

 கண்ணை கட்டி
கடலில் விட்டால்-உண்மை
காதல் செத்திடுமா?
வெள்ளை உடை உடுத்திட்டாள்
விதைவை என்று ஆகிடுமா?

 மனதில் வாழும் மணாளனுடன்
மங்களமாய் வாழ நினைத்த இவளை
போலி சம்பிரதாயம்
பொட்டகம் கட்டி ஒதுக்கியது
அவளை மட்டுமல்ல
அவள் உணர்வுகளையும்..

Friday, November 26, 2010

Share

ஆருயிரே...!

 இரவின் மடியில்
மதி உன் நினைவில்
வானம் நோக்கி
உன் வருகைக்காக
காத்திருக்கையில்
நிலவென ஒளி வீசி
நட்சத்திரங்களாய் பிரகாசித்து
முகிலினில் துயில் கொள்ள
விளைகின்றாய் ஆருயிரே...!

Monday, November 22, 2010

Share

ஓர் பெண்ணின் கதை....

 அலைகள் தொடும் கரையினிலே
கரை தொடும் அலையினை ரசித்தபடி
கற்பனை அலைகளை  மனமெனும்
கரையினில் மோத விட்டு
காத்திருந்தாள் அவனுக்காய்...


ஒருதலைக்காதலாய்
வளர்த்திட்ட அவள் முடிவை
அவனிடம் சொல்லிட
அழைத்திட்டாள் அவனை
அழைப்பை ஏற்ற அவனுக்காய்
காத்திருந்தாள் கடற்கரையினிலே.......


எதிர்கால வாழக்கையினை
ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும்
என்றெண்ணியவளாய் திரும்பினாள்
எதிரினிலே அவன் நின்றான்.....


அவனை பார்த்தவுடன்
அவசரமாய் எழுந்து நின்றாள்
ஆவலுடன் அவன் நலம் அறிந்து
அமரும்படி அழைத்திட்டாள்......


இடைவெளியுடன் இருவரும்
இரு கல்லில் அமர்ந்திட - அவன்
இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட
இவள் பார்வை அவனை  நோக்கி ஏக்கத்துடன்....


 
  
ஆறு வருடங்களாக -அவன்
ஆருயிர் நண்பனாய் அவள் வாழ்வில்
அவள் உள்ளம் அறிந்தவனாய்....
காலங்கள் ஓடுகையில்....


சுற்றத்தார் பார்வை தப்பாகிட
சுற்றுகிறாள் அவனுடன்  என்றிட
சூறாவளியாய் அவள் மனம்
சுதாரிப்பின்றி  தனிமையில்.....


பிறர்  சொல் கேட்டு
பிறந்திட்ட உடன் பிறப்புக்கள்
பிணைந்திட்ட சந்தேகத்தில்
சொந்தங்கள் நடுவினிலே
பரிதவித்தாள் தனிமையிலே....


உடன் பிறந்த உறவுகளே
உஷ்ணமாய் நோக்குகையில்
உறவுகள் அன்பை விட - நட்பாய்
உள்ளம் அறிந்த அவனை
உடையவன் ஆக்கிட எண்ணினாள்...


தனது விருப்பத்தை
தனிமையில் அவனிடம்
சொல்லிட எண்ணியவள்
அழைத்தால் தொலைபேசியில்
அனுமதியை பெற்றவுடன்
அவளிடத்தில் உற்சாகம்.


அனைத்தும் அறிந்தவன் போல்
அவன் பார்வை அவளை நோக்கிட
அழைத்ததன் காரணத்தை
அன்பாக வினவினான்..


மோதிய கற்பனைகளை
மொத்தமும் மறந்தவளாய்
உதடுகள் தடுதடுக்க
கண்களில் ஆறுபோல்
கண்ணீர் ஊற்றெடுக்க...
நடந்தவைகளையும்
 நடக்க வேண்டியவகளையும்
நாவு தடுதடுக்க  கூறிமுடித்தாள்...


சில நொடிகள் மெளனமாய்
சிந்தனையில் மூழ்கியவன்....
மெளனம் கலைந்தவனாய்
தலை நிமிர்ந்து அவளை நோக்க
அவள் பார்வை  முடிவை வினவ
தன்னம்பிக்கை ஊட்டியவனாய்
தன் முடிவை செப்பினான்.....


தூற்றுவார் தூற்றட்டும்
தூறலில் முளைத்த செடியாய் -எம்
வாழ்வை  தொடருவோம்
தீர்க்கமாய் தன் முடிவை
செப்பினான் அவளிடத்தில்....


  வீண்பழி கூறியோர் வியந்திட
வாழ்ந்திடுவோம் எனும் அவன்
வார்த்தை அவள் மனதில் நம்பிக்கை
வார்த்திட  பெருமூச்சை விட்டபடி
அவன் தோளில் அவள் சாய்ந்தாள்.....

Friday, November 19, 2010

Share

நட்பு...

நினைக்கும் பொழுதிகளில்
கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும் தோழியே
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...

Monday, November 15, 2010

Share

எல்லாம் கனவாக போச்சு.......

 அன்றொரு நாள்
பூத்துக் குலுக்கும்
பூங்காவனத்தில்
நான் மட்டும் தனிமையில்
என் நினைவலைகளை
அவிழ்ந்து விட்டு
பெரு மூச்சோடு நான்...

எங்கும் நிசப்தம்
திடீரென...
யாரோ என்னை
அழைப்பது போல
நினைவுகளுக்கு ஓய்வு கொடுத்து
கூப்பிட்ட ஓசையை நோக்கி
பார்வைச் செலுத்தினேன்
என் கண் முன்
ஒரு அழகான தேவதை
ஒரு கணம் சொக்கி தான் போனேன்
எனக்கு இப்படி ஒரு அதிஷ்டமா...

மொட்டொன்று அவிழ்ந்து
இதழ் விரிப்பது போல
கட்டழகி உதட்டில்
புன்னகைகளை சிந்துகின்றாள்
என் பெயர் சொல்லி அழைத்து
உறைந்து போய் இருந்த என்னை
தான் அருகில் இருப்பதை
தெரியப்படுத்துகின்றாள்.

ஏதோ நானும் சுதாகரித்துக் கொண்டு
என் வினாவை தொடக்கும் முன்- அவளோ
தூறலின் பின் பெய்யும்
பெரும் மழையென
தன் மனதில் உள்ளவைகளை
கொட்டித் தீர்க்கின்றாள்.


'அவள் இதழோர புன்னகை
குறு குறு பார்வை
படபடக்கும் உன் இதயம்
இவற்றுக்கு முன்னால்
பறந்து தான் போகின்றேன்
பட்டாம் பூச்சியென"
என் கற்பனைகள்...

அவளும் காதலலை சொல்ல
நானும் அதனை ஆமோதிக்க
பரவசமாக நகர்கின்றது நாளிகைகள்
நேரங்களும் தேய்கின்றது
நெருக்கமோ அதிகரிக்கின்றது.
அவளோ நாணத்தில்
நானோ மயக்கத்தில்
சொர்க்கத்தை பிரசவிக்கும்
தருணத்தில்..
யாரோ என்னை 
தட்டுவதுபோல் உணர்வு
திடுக்கிட்டு விழிக்கின்றேன்
எல்லாம் கனவாக போச்சு..

Saturday, November 13, 2010

Share

உன்னைக் காதலிப்பதால்....

 இரவின் மடியில் நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே...
உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே...
பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே...
குருடர் கூட ஒளியைப் பெறுவார்
உன் விழியின் அருகில் நின்றாலே...
ஊமை கூட வாயைத் திறப்பான்
உன்இனிய பெயரைக் தான் சொல்ல..
உன்னை படைத்த பிரமன் கூட
ஒடி வருவான் உன் பின்னாலே...
இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே...
அத்தனைக்கும் ஓர் காரணம்
நான் உன்னைக் காதலிப்பதனால் தானே........

Wednesday, November 10, 2010

Share

மானசீக காதல்....

 உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் மறக்கமுடிவில்லை...
உன்னை வெறுக்கத்தான்
கோவமாய் நடிக்கிறேன் 
வெறுக்க முடியவில்லை....
உன் பேச்சு வன்மையால்
என்னைக் கவர்ந்தாய்...
உன் ஆசை வார்த்தையில்
என்னைக் கொன்றாய்....
நீ என்னை வர்ணிக்கும் போது - நாணம்
என்னைக் கட்டிப் போடுகின்றது....
என் பார்வையில் நீ தோன்றுகிறாய்
என் சுவாத்தில் நீ கலக்கிறாய்
என் எண்ணங்கள் உன் நினைவால்
தடம் புரள்கின்றது....
நீ என்னைக் காதலிக்கிறாய் என்று
என்னால் உணர முடிகிறது..
நினைப்பது சுலபம் மறப்பது கடினம்
என்று எனக்கும் புரிகின்றது...
நினைப்பது நடக்காது என்று தெரிந்தும்
நாம் காதலிப்பது எப்படி?
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்...

Monday, November 8, 2010

Share

என் அன்னை

சுமையாக வந்த என்னை
சுகமாக ஏற்ற தாயே
உன்னை உருக்கி என்னை
வடித்த சிற்பி நீயே
உன் பசியை மறந்து
என் பசியை போக்கியவளே
நாம் அம்மா என்று அழைக்கையில்
அடிவயிறு குளிர்ந்தவளே
முதல் அடி  எடுத்து வைக்கையில்
என்னை ஆயிரம் முத்தமிட்டு
அரங்கேற்றம் செய்தவளே
உனக்கு அபிஷேகம் செய்தாலும்
என் அன்னை உனக்கு
நான் செய்யும் நன்றி
போதாதம்மா.....

Wednesday, November 3, 2010

Share

தீபாவளி வாழ்த்துக்கள்

இணையத்தில் உலவிடும்
இனிய நண்பர்களுக்கு-வாழ்வில்
இன்பங்கள் பல பெற்று
இனிதே வாழ்ந்திட
இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள்...

அன்புடன்:- தோழி பிரஷா
Share

உறவின் வலிமை

 இன்று நானாக நானில்லையே
ஓயாத உன் நினைவலைகள்
என் இதயத்தில் போதுகின்றன.
கவலைகள் ஆட்கொள்ளும்
தருணங்களில் கவிதைகள்
பிறக்கின்றன என்னுள்
அந்த கவிதையிலும்
நீயே வாழ்வதால்
முடிவின்றி தொடர்கின்றது
உணர்வுக்கும் அன்புக்குமான
போராட்டம்..
நீர்க்குமிழ் போல் நிலையில்லாத
இந்த வாழ்க்கையில்
எனக்கும் உனக்கும்
ஏன் இந்த பாச பிணைப்பு...
நீயும் நிம்மதியில்லை
நானும் நிம்மதியில்லை
ஏன் இந்த
பாச போராட்டம் நமக்குள்
விடையில்லா இவ் உறவுக்கு
முற்றுப் புள்ளி வைக்க
முயற்சிக்கின்றேன்
முடியவில்லை என்னால்....

Monday, November 1, 2010

Share

கனவு காதல்....

பிரிவதில்லை காதல் என்றாய்
பின்னர் பிரிவை மட்டும்
ஏன் எனக்கு
வலியாய் தந்தாய்?
நிஐங்கள் அழிவதில்லை என்றாய்
என் நிஐ அன்பை
இன்னும் ஏன்
உணர மறுக்கிறாய்?
கனவுகள்
நிஐமாவதில்லை தான்..
ஆனால்
நிஐங்களைவிட
கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
கனவில் தான்
நீ என்னோடு
நீண்ட தூரம் பயணிக்கிறாய்
என்பதால்!

Saturday, October 30, 2010

Share

எல்லாம் நீயாய்!

 மறந்துவிட நினைக்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாய்..
வெறுத்துவிட நினைக்கிறேன்
என் விருப்பமெல்லாம் நீயாய்...
விலகிவிட நினைக்கிறேன்
என் நிழலெல்லாம் நீயாய்!
ஆனால்
முடியவில்லை என்னால்.


Thursday, October 28, 2010

Share

பிரிவின் தருணம்.....

 காதல் என்னும் இன்பத்தினை
உணர வைத்த ஓர் இதயம்
ஏனோ தெரியவி்ல்லை
துடிக்க மறுக்கின்றது
எனக்கும் சேர்ந்து....

காய்ந்த காயப்பட்ட
என் இதயத்தை விட்டு
பறந்து செல்ல
நினைத்து விட்டாய் நீ
பரவாயில்லை
பறந்து செல் கிளியே...

பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடும் நதிகளின்
அருகில்,
பூக்களால் நிறைந்த வழியும்
நந்தவன சோலையில்,
பசுமையான இதயத்தில்
நிரந்தரமாக அமர்ந்து கொள்
உன் இனிமையான வாழ்வுக்காக.....

காதல் என்னும் ரணத்தினால்
செல்லரித்துப் போன
இதயமாயிற்றே.
எஞ்சியிருக்கும் நாட்களை
உன் நினைவுகளின் ஸ்பரிசங்களோடு
காலத்தை கடத்தி விடுவேன்..

காயப்பட்ட என் இதயத்தில்
காதல் என்னும் போர்வையில்
ஓய்வு கொண்ட பட்சியே,
புது புது அர்த்தங்களை
என்னில் உணர வைத்த
உன் உறவினை,
உயிர் மூச்சு உள்ளவரை
மறக்க மாட்டேன்...

Monday, October 25, 2010

Share

தூக்கமின்றி தவிக்கிறாள்....

உன் நினைவுகளால் 
பிணையப்பட்டு 
இவள் இன்று
தூக்கமின்றி தவிக்கிறாள்.

தூக்கமின்றி தவிக்கும்-உன்
தூயவளுக்கு உன் பதில்
தூது அனுப்பிடு கனவிலாவது....

 உன் நினைவு மெத்தையில்
உல்லாசமாய் தூங்கட்டும் 

Sunday, October 24, 2010

Share

தூதாக கவிதைகள்

கவிதைகள் வாடுகின்றன
உன்னை காண ஏங்குகின்றன.
பல கவிதைகள் எழுதுகின்றன
பயந்தால் மடிகின்றன.
தொலைத்து விடாதே
எனது கவிதைகளை
தொலைந்தால் தொலைப்பது
கவிதையல்ல...
என் உணர்வின் ஆதாரங்கள்
ஏதோ புரியவில்லை
வெகுவிரைவில்
உன்னை சேர்ந்து விடலாமென
நினைக்கின்றன கவிதைகள்.

Saturday, October 23, 2010

Share

உன் பிரிவால்..

 என் நெஞ்சே நீ எங்கே
உன்னைக் காணாமல்
என் இதயம் அழுகிறது.
கண்கள் கண்ணீரை தினம்
இங்கு வடிக்கிறது.
வீசி வரும் காற்றை பிடித்து - உன்
முகவரி கேட்டேன் கிடைக்வில்லை
வெண்ணிலவை அருகில் அழைத்து
உன் முகம் தேடினேன் தெரியவில்லை
உன் குரலென்று நான் ஓடி வந்தேன்
அது குயிலென்று தெரிந்தும் வாடி நின்றேன்
அன்பே என் அமுதே நீ எங்கே
கண்னே என் நெஞ்சே நான் இங்கே
நிஐம் உன் நினைவால் நிழலாகின்றது
நிழல் உன் நினைவால் நிஐமாகிறது
பாவையே என் போதையே
ஏன் நீ என்னை விட்டுப் பிரிந்தாய்
அதனால் நான் இன்று கல்லறையில்....

Thursday, October 21, 2010

Share

சாபம் பெற்ற மங்கை

இனிய நம் காதல் நினைவுகளை
இசையாக மீட்டுகின்றேன்
இனியவன் செவிகளுக்கு
இனியவளின் தூதாக....

 தண்ணீரில் மீனைப்போல் நானிங்கே
கண்ணீரில் நீந்திடும் பெண்ணானேன்..
கண்ணாளன் நீயின்றி நானிங்கே
முள்ளில்பட்ட சேலையானேன்.

வலிகளுடன் வாழ்ந்திடும்  
வரம்  வேண்டி வந்தேனோ???
வஞ்சி என் வாழ்வின்று 
வஞ்சகர் கையினிலே
வந்து என்னை மீட்டு செல்
வலிகள் நிறைந்த கனவுகளுடன்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக....

Tuesday, October 19, 2010

Share

ஆழமான நட்பு ....

 பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்
சில்லென்று வீசும் காற்று
கரையினை தொட்டு
ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஓசை
புதர்களின் மறைவில்
காதலர்களின்
முத்தத்தின் சத்தம்
அங்காங்கே காதல் ஜோடிகள்
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் பக்கத்தில் அவள் 
கண்ணீரை அருவியாக கொட்டுகிறாள்
சமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..
யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

Sunday, October 17, 2010

Share

வசியகாரா....

 ஏன் என் கண்னில் பட்டாய்..
ஏன் நெஞ்சில் புகுந்தாய்...
ஏன் காதல் மொழி பேசினாய்....
கலங்குதடா என் நெஞ்சம்
கானல் நீராகும்
என் காதலை எண்ணி....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்...
உனக்கும் சேர்ந்து
என் இதயம் துடிப்பதால்
கனக்கிறது என் மனம்.

நிமிடங்கள் யுகங்களாக மாற
சுட்டெரிக்கும் உன் நினைவுகள்
இடிகளாக இதயத்தை தாக்க
முயற்சிக்கின்றேன் நானும்
முடியவில்லை மீள..

வந்துவிடு வந்துவிடு
வசந்தங்களாகட்டும்
என் வாழ்வு
உன் வருகையினால்.....

Saturday, October 16, 2010

Share

போர்க்களமாய் என் வாழ்வு........

 எண்ணிட முடியா  சோதனைகள்
ஏக்கம் நிறைந்த  வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன்  இம் மண்ணில்...

அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...

பட்டினியால் பல காலம்-மரத்தடியில்
படுத்துறக்கம் சில காலம்..
பயமே வாழ்வாக 
பார்த்திருந்தேன் வானமதை...

 போர்க்களமாய்  என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி  போனதிங்கு...

உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....

Friday, October 15, 2010

Share

இன்று

உயிரே நீ என்றாள்
உண்மையா என கேட்க
நீ இன்றி நான் இல்லை
யார் என்னை தடுத்தாலும்
என் இதயம் நீயே என்றாள்
ஆனால் இன்று
அவளோ மணவறையில்
நானோ கல்லறையில்......
Share

கனவுகள்

"உன்னோடு ...
வாழ வேண்டும் என்ற
எண்ணத்தில் ..
நான் உனக்காக
கட்டிய கனவுகள் பல
இன்று அவை
மண்ணோடு மண்ணாக ...
எனை பார்த்து சிரிக்கின்றன..
சிரிப்பது
என் கனவுகள் மட்டுமல்ல
சில உறவுகளும் தான்.."



Thursday, October 14, 2010

Share

மானுடா!

 வேதங்கள் நான்கு...
பூதங்கள் ஐந்து....
நாதங்கள் ஏழு....
மாதங்கள் பன்னிரண்டு...

இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்....
எத்தனையோ பாவங்கள்....
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்....

நண்பர்களே வாருங்கள்...
நேசக் கரம் தாருங்கள்...
நட்பென்னும் ஒளி வீசி
இருள் துடைப்போம் வாருங்கள்...

Wednesday, October 13, 2010

Share

முதல் பார்வை

முதல் தரிசனத்திலே
என் விழிகளுக்குள்
புகுந்து கொண்டவள் நீ..
உன் கண்களின்
ஏக்கப் பார்வையும்,
மெல்லிய புன்னகையும்
எனக்கு மட்டும்....
என் மனதில் பதிந்த
உன் நினைவுகள்
மறையாது என்றென்றும்!
Share

உனக்காக....

நான் சாக நினைத்தது
எனக்காக...
அதை மறந்து வாழ்வது
உனக்காக....
தாங்க முடியாத துன்பம்
எனக்கு....
அதையும் தாங்கி வாழ்கிறேன்
உனக்காக....
சிரிக்க முடியாத வேதனை
எனக்கு...
அதையும் தாங்கி
சிரிக்க கற்றுக் கொள்வது
உனக்காக...

Tuesday, October 12, 2010

Share

உயிரெழுத்தாய் நீ...!

 அன்பாக கவிதை கேட்டாய் ...
ஆசையாய் எழுத அமர்ந்தேன்
இன்ப நினைவுகள் பொங்கின
ஈட்டியாக குத்தியது சோகம்
உடனே தடுமாறியது மனம்
ஊமையாய் அழுதது இதயம்
எப்படி இனி கவிதை எழுத........
ஏனடி உனக்கு பிடிவாதம்
ஐயம் வேணாம் ஆயுசுக்கும் நீ தான்
ஒரு நாளும் மறவேன் உன்னை
ஓர் நாள் மறந்தால் ஓடி வா கல்றைக்கு
பவ்வியமாக தூங்கும் என் உடல்
உன் நினைவுகளோடு......!

எழுதியவர் அருந்தா.

Monday, October 11, 2010

Share

முதல் காதல்.

 ஒரு கோடி வானவில்
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்...

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து .

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்
... மறந்து விடு என்னை....

அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...

(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

Sunday, October 10, 2010

Share

என்னை ஈன்றவளே.....

 அம்மா என்னை ஈன்றவளே
கவிதைகளில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்
காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்.

பாஷைகளின் அழியாத மொழியாக
அன்பு என்னும் வார்த்தையில்
அர்ச்சனை மந்திரமாக
அறிவையூட்டும் ஆசானாக
இருந்திருக்க வேண்டிவளே
என்னை தவிக்க விட்டு சென்றதேனம்மா?

நீ இல்லாத இவ்வலகில்
நான் படும் அவஸ்தைகள்
அறியாயோ?
பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக
பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன்
என்நிலை அறிந்து ஆறுதல்
சொல்ல யாருமில்லை எனக்கு..

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்...

என்னால் நடிக்க கூட முடியவில்லை
என்னை அரவணைத்து கொள் உன்னுடன்
சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக
வாழ்வோம் நிரந்தரமாக......