Wednesday, September 26, 2012
Tuesday, September 25, 2012
Tuesday, September 18, 2012
Share
வாழ்க்கைச் சக்கரத்தில்
மனிதனே!
வாழ்க்கைச் சக்கரத்தில்
வந்து போகும்
வரைமுறைகள் பலவிதம்
வாழும்வரை
விரோதங்களை ஒதுக்கிவிடு-வீண்
விவாதங்களை தவிர்த்திடு...
வேற்றுமைகளை விலக்கிடு-பல
வேஷங்களை களைந்திடு...
பலருக்கு உதவிடு-உன்
பாவங்களை கழிவிடு..
வஞ்சத்தை மறந்திடு-சூழ்ந்த
வஞ்சகர்களை களைந்திடு...
சுயநலத்தை தவிர்த்திடு-உன்
சுற்றத்தை மதித்திடு...
நம்பிக்கையை வளர்த்திடு-உண்மை
நட்புக்களை மதித்திடு...
துரோகத்தை மறந்திடு - உன்
துரோகிகளை மன்னித்திடு...
தவறுகளை உணர்ந்திடு
தனிமையை தவிர்திடு
பிழைகளை உணர்ந்திடு -பிறர்
பிழைகளை மன்னித்திடு...
பெருமையை துரத்திடு-பிறர்
பெருமைகொள்ளும்படி வாழ்ந்திடு...
தலைக்கணத்தை தவிர்திடு-பிறருடன்
தன்மையாய் நடந்திடு..
அன்னையை மதித்திடு-அன்பால்
அனைத்தையும் வென்றிடு..
உறவுகளை மதித்திடு-உன்
உரிமைகளை பெற்றிடு...
இன்றிருப்போர் நாளையில்லை
வந்த வழி எப்போ செல்வோம்
யாருக்கும் தெரியாது..
ஒற்றுமையை வளர்திடுவோம்.
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
Tuesday, September 4, 2012
Share
அப்பாவின் பிரிவு.
நிச்சயமற்ற
இந்த உலகில்
தினம் தினம்
வந்து போகும்
ஆயிரம் உறவுகள்
கருவறையில்
களம் அமைந்து
வீரியம் மிக்க வித்தாக
அம்மாவுக்கு எனை சொந்தாக
புது உலகம் படைத்தவர் அப்பா.
ஈரைந்து மாதங்கள்
ஓர் உடலில்
ஈருயிராய் வாழ்ந்துreep
தொப்புள் கொடியறுந்து
தரை விழும் நேரம்
தலைமறைவானது
அப்பா எனும் உறவு
பாசம் எனும் பிணைப்பில்
அப்பாவின் அரவணைப்பு
அஸ்தமனமானதில்
அவதியுறும் உறவாய்
அம்மாவும் நானும்
அம்மாவின்
கண்களின் ஓரம் பூக்கும்
கண்ணீர் துளிகளின்
வலி சொல்லும்
தொலைவாகிப் போன
அப்பாவின் பிரிவு.
Subscribe to:
Posts (Atom)