அன்று என் வாழ்வின் வசந்த காலம் அவள் என்னருகில் ஆனந்தத்திற்கு
எல்லையே இல்லை
சுமைகள் கூட இதமாய் இருந்தன இருட்டில் கூட வெளிச்சமாய் அவள் என்னைச் சுற்றி எங்கும் பட்டாம்பூச்சி சிறகுகள் முளைந்த பறவைகளாய் ஆனந்தத்தில் பறந்து திரிந்தோம்.
அவள் வருகைக்காக காத்திருக்கும் பொழுதில் கணங்கள் கூட யுகங்களாக மாற தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்
ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக ஏதோ பெரிய குற்றமாக போடும் அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்
இன்பம் என்னும் போதையை என்னுள் உணர வைத்த வசியக் காரி அவள் என் காதலி....
என் காதல்
ஞாபங்களை - நீ
இலையுதிர் காலமாய்
நினைத்து
உதிர்த்தெறிந்திருக்கலாம்
ஆனால் நான்
உன் காதல் சில்மிஷங்களை
நிலாக்காலமாய் எண்ணி...
இன்னும்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
உன் ஸ்பரிசங்களின்
தீண்டல்களால் உண்டான
இன்பம் அரவணைத்து
கொள்கின்றது என்னை....
நானோ சந்தோசத்தில் துள்ளி குதிக்கிறேன் கட்டி தழுவுகிறேன் சற்று நேரத்தில் எங்கும் வெறுமையாய் கண் விழித்துப் பார்க்கிறேன் வெட்கத்தில் கண் சிமிட்டுகின்றது என் தலையணை என் அறியாமைய் கண்டு...
நான் அநேகமாக
மெளனமாய் இருக்கிறேன்
எதிரிலிருக்கும் சுவருடனும்
எதிர்ப்படும் மரத்துடனும்
அவ்வப்போது பேசுகிறேன்
சிரிக்கிறேன் ஏனெனில் எனக்கு
தெரியாமல் என் கனவுகள்
களவாடப்படுகின்றன.
பகல் பொழுதினில்
பாதி தூக்கம் கொண்டு மீதி தூக்கம்
வரும் போது
அழகிய உருவமாய்..
அகிம்சை வாதியாய்...
ஆசையின் நிலவாய்...
இன்பத்தின் வழியாய்...
இரகத்தின் உயிராய்...
உண்மையின் உறவாய்...
உருவத்தில் புது மாற்றமாய்...
ஊட்டி வளந்தவளாய்....
ஊரின் கண்பட்டவளாய்....
எனது தேவதையாய்....
ஏக்கத்தின் புது வீக்கமாய் வந்து...
என் தூக்கத்தை கெடுக்காதே.....