Tuesday, November 20, 2012

Share

மனம்



உன்னை எதிர்பார்த்து
காத்திருந்து-உன்
வரவின்றி தளர்ந்திட்ட நாட்கள்
இன்று நினைக்கையிலும்
மனதுள் ஏதோ ஒரு வித சோர்வு
இருந்தும் நீ என்னை தேடி
வருவாய் என் என் மனம்
திரும்ப திரும்ப எதிர்பார்க்கின்றது
பல முறை ஏமாற்றங்களை சந்தித்தும்...!
Share

இன்று போல் என்றும்...


துயரங்களை மறந்து
துன்பத்தில் சிரித்து...
இன்பங்களை மட்டே
இசையாய் மீட்டி...
உனக்கென நானும் 
எனக்கென நீயம்
வறுமையிலும் வாடிவிடாது
வாழ்ந்திடுவோம்...
இன்று போல் என்றும்-நாம்
துன்பங்களை மறந்து
இன்பங்களை மட்டுமே
ரசித்திடுவோம்...!