Saturday, December 31, 2011

Share

புதிய ஆண்டில்....



சோதனை பல சபித்து - அதில்
மனிதனை வேதனையில்
விழ வைத்து
வெற்றி பயணத்தினை முடிந்து
விடைபெற தயாராகி விட்டது
2011.....

ஓராயிராம் ஆசைகளும் ஏக்கங்களும்
நம்முள்ள....

யுத்தம் என்னும் 
வேள்விக்குள் தீக் குளித்து
கேள்விக் குறியோடு
அலைந்து திரியும்
எம் தேசத்து உறவுகளுக்கு
விடை கிடைத்திட...

இயற்கையின் சீற்றதில்
சின்னாபின்னமாகி போன
பல ஆயிரம் உயிர்களை
எனியும் இழக்காமல் இருக்க
இயற்கையின் சமநிலையை காத்திட...

தோல்வியே வாழ்வாக
துவண்டு போன உள்ளங்களுக்கு
சூரிய உதயமாய்
வெற்றிகள் மட்டும் கிடைத்திட....

கண்ணீரில் கரைந்து
பாசைகளை மெளனமாக்கி
சோர்ந்து போனவர்களின் உள்ளங்களுக்கு
புன்னகை மட்டும் வரமாய் கிடைத்திட...

லட்சியம் ஏதுமின்றி
கட்டாகலி மாடுகளாய்
அலைந்து திரியும் 
இளைஞர் கூட்டத்தில் 
தன்னப்பிக்கை என்னும்
அட்சயபாத்திரம் ஊற்றெடுத்திட...

எண்ணற்ற கற்பனையில்
ஏங்கி அலையும் 
மனித மனங்களின்
ஆசைகளை பூர்த்தி செய்திட...

பிறக்க போகும் 2012
வரமாய் அமைய
வாழ்த்துகின்றேன்....

Tuesday, December 27, 2011

Share

மரணத்தின் பின்னால்...



மனித சிந்தனைக்கு
அப்பாலும் சில
புதிய தேடல்கள்
விரிந்தே கிடக்கின்றது

சிலரது ஒரு நாள்
ஒரு சரித்திரம்!.
சிலரின் வாழ்நாள்
முழுவதும் சூனியம்.

வாழும் போது தெரியாத
வாழ்வின் தத்துவம்
இறுதி மூச்சில்
மரணம் எனும்
வேள்வியில் உணர்கிறான்
மனிதன்!

மரணத்தை தெரிந்த
மனிதர்கள்
வாழ்கின்ற போதே
வளர்கின்றனர்.

மாலையில் மரணிப்போம்
என அறிந்துதான்
மலர்கள் மகிழ்சியாய்
இதழ் விரிக்கின்றன..

கடலோடு கலந்திடுவோம்
என அறிந்தும்
சலனமின்றி சலசலத்து
ஆறுகள்
மகிழ்ச்சியாய் 
கடலினை முத்தமிடுகின்றன..

இறப்பை உணர்ந்து
இருக்கின்ற காலத்தை
இன்பமாய் கழிக்கும்
இயற்கையின் லாபவம்
மனிதனுக்கு
பிடிபடுவதே இல்லை என்பதே
துரதிஷ்டம்...

Thursday, December 15, 2011

Share

பூக்களின் சொந்தக்காரியே!


தோழியே!!
மறைந்தாயோ என்னை? - இல்லை
மறக்கடிக்கபட்டாயோ?

என் கவலைகள் மறந்து
மனம் விட்டு பேச
மணிக் கணக்கில் 
அரட்டை என்னும் பெயரில்
ஆயிரம் கதை சொல்லி
குதுகலித்திடும் அலைபேசிகள்
சலனமின்றி சமாதியானது
உன் மெளனத்தினால்,

தொலைவாகி போனதால்
தொலைந்து போனதா 
உன் இதயம்...?
நெருங்கிட நினைத்தாலும்
வார்த்தையால் வெடிக்கிறாய்
உதிர்ந்திடும் நிமிடங்களில்
சிலிர்த்திடும் சினங்களினால்
சின்னாபின்னமாகிறது
நட்பின் ஆயுள்.

அறியாமையில் நீயூம்
ஆணவத்தில் நான் மட்டுமோ?
பூக்களுக்கு சொந்தகாரியே!
மென்மையான உன் இதயம்
அணுகுண்டாய் மாறும்
அபாயநிலை அறியாயோ?

மனம் விட்டு பேச
ஆயிரம் கதைகள்
சிந்தியே கிடக்கிறது - ஆகையால்
சிதறுகிறது என் மனம்.
சோகங்களை மட்டும் - எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
நாடி தளர்த்து,
உடல் சோர்த்து
உயிர் போகும் வரை
ஓயப்போவதில்லை
என் புலம்பலும்.....

Sunday, December 11, 2011

Share

மனசு....



திசைகள் இன்றி
திண்டாடிய மனம் ஒன்று
பாவை அவள்
பார்வை தீண்டலினால் 
பக்குவமானது அன்று...

இதய கூட்டினை உடைத்து - அதில்
அவளை தான் இருத்தி
நேசிக்கத் தொடங்கியது அன்று..
படிப் படிப்யாக - அது
இமயமாக வளர்த்து
காதல் என்னும் போர்வையில்
ஆட்சி செய்கின்றது இன்று...

உதிரத்தில் கலந்திட்ட அவள்
உயிருள்ள வரை
உயிர்நாடியாய் தன்னுள்
என்றும் இருப்பாள் என்னும் 
நம்பிக்கையில் காலம் நீள்கிறது.

நினைவெல்லாம அவளானதால்
நிம்மதியின்றி தவிக்கின்றது தினமும்
யாரும் அறியாமல் தன்னுள்
புகுந்து அவள் புரியும்
சிந்து விளையாட்டக்களால்
சித்தம் கலக்கி நிற்கின்றது மனசு...

இருளின் கருமையில்
இமைகளின் ஓரம்
துளிரும் கண்ணீர் துளியில்
சுகமான அவள் நினைவுகள்
ஆறுதல்படுத்துகின்றது
மூன்றாவது கையாய்.....

பெண்ணே!
உயிர் தொலைந்தது உன்னிடத்தில்
இருந்தும்..
இதயத்தில் உருவாக காதலை
உனக்காக கவிதையாய்
எனக்குள் மெளனமாக்கிறேன்...

Wednesday, November 30, 2011

Share

உன் காதலால்...

 உள்ளங்கள் இரண்டிங்கு - தம்
உணர்வினை பகிர்ந்து
உண்மை அன்பினால்
உருவான கரு காதல்..

இதயங்கள் இட மாற
நினைவெல்லாம் நீயாக
என் சுவாசம் தொலைந்து
உனையே நேசிக்கிறேன்

என் கண்ணில் இருப்பது
கருவிழியா அல்ல நீயா
இதயம் துடிக்குதா அல்லது அங்கே
உன் பெயர் ஒலிக்குதா?

இதயத்தில் உதயமாகி
உதிரத்தில் ஊற்றெடுத்து
உடலெங்கும் பரந்தோடும்
உன் காதலால் - இவ்
உலகத்தில் வாழுது என் உயிர்.

Sunday, November 27, 2011

Share

நட்பு..



எண்ணங்கள் ஒன்றானதால்
எதிர்பார்ப்பு எதுமின்றி
உருவான துணை ஒன்று - என்
வாழ்வில் உற்ற துணையானது 
உயிர் நட்பாய்...

சுற்றி சுற்றி வட்டமிடும்
இவ் வாழ்வில்
கட்டங்கள் பல கடந்து
சட்டங்கள் பல தாண்டி
திட்டமிட நல் வாழ்வை
உடனிருந்து திடமாய் - என்றும்
உழைப்பது உண்மை நட்பு..

தனக்கென இல்லாது
நமக்கென அனைத்தையும்
பகிர்ந்திட்ட போதிலும்
பழியினை தான் ஏற்று
பாரினில் என் புகழ் வாழ
பக்குவாய் பக்கத்திலிருந்து
உழைக்குது நட்பு..

உறவேதும் இல்லாது
உணர்வால் உருவான உறவு இங்கே
உதிரத்தினை உழைப்பாக்கி - தன்
உயிரிலும் மேலான எனை தாங்கி
உண்மை நட்பின் உன்னததை
உலகுங்கு பறை சாற்றுகிறது இங்கே...

Saturday, November 19, 2011

Share

கண்ணீர்..




மனித மனங்களின்
தாரக மந்திரம்
கண்ணீர்..

கடல் என நீண்டு செல்லும்
நினைவலைகளில்
சிக்கித் தவிக்கும் உள்ளங்களின்
உண்மையான நட்பு
கண்ணீர்...

வலிகளை மறக்க செய்ய,
கடவுளின் அன்பு பரிசு,
கண்களை சுத்தப்படுத்தி
இதயங்களை இதமாக்கி
பாவங்களின் மன்னிப்பாய்
கண்ணீர்...

இரவின் மடியில்
தனிமையின் பிடியில்
படுக்கையறையில்
தலையணையுடன்
சண்டையிட்டு - இளம்
பெண்கள் பேசும்
மெளன பாஷை
கண்ணீர்..

பிறப்பிலும் கண்ணீர் 
மனித இறப்பிலும் கண்ணீர்
நட்பிலும் கண்ணீர்
காதலிலும் கண்ணீர்
வலியிலும் கண்ணீர்
சந்தோசத்திலும் கண்ணீர்
இழப்பிலும் கண்ணீர்
ஒன்றை பெறுவதிலும் கண்ணீர்
கண்ணீர்!!!
இன்றைய மனித வாழ்வில்
உயிர் காவியம்....


Saturday, November 12, 2011

Share

சிசு பேசுகின்றேன்....




தாயே!!!
சிசுவான என்னை
சிறை பிடிக்கின்றது
ஆயிரம் எண்ணங்கள்
எதிர்காலத்தை எண்ணி...

அன்னையே!
என்முகம் அறிந்திருக்க
உனக்கு வாய்ப்பில்லை
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை வடிவமைகிறேன்.
உன் உணர்வுகளின் துடிப்பில்
உன்னை புரிகிறேன்
உன் மூச்சின் ஒலியின்
வெளியுலகின் நிலையை உணர்கிறேன்

சொர்க்கமான
உன் குட்டி வயிற்றில்
செழுமையாய் வாழுகிறேன்
உன் வாய் மூணு மூணுக்கும்
இசை கேட்டே
நிம்மதியாய் உறங்குகின்றேன்.
உன் கண்களில்
கண்ணீர் குளமாகும் போது
நானும் அழுகிறேன்.
உன்னில் சிரிப்பனை காண
எட்டி உதைகிறேன்
உன் முகம் மலர்கிறது
இவற்றை நானும் ரசிக்கின்றேன்
உன் அசைவுகளின் மூலம்..

இருந்தும்
நாளைய தினம்
நான் வெளி உலகம்
காண வேண்டிய நிர்ப்பந்தம்
ஆகையால்,
அச்சம் என்னை அரவணைக்கின்றது
நாளைய என்
எதிர்காலத்தை எண்ணி..

Saturday, November 5, 2011

Share

காதல் பட்சி..



பட்சியே!!!
உன்னை காணும் வரையில்
என்னை தீண்டியதில்லை
காதல்...

நீ ஜோடியாய்
ஒய்யாரமாய் மரத்தடியில் 
காதல் மொழி பேசுகையில்
கனக்கிறது என் மனம்
காதலை எண்ணி...

பட்சியே!!
உனக்களித்த சிறகுகளை
எனக்கும் அளித்திருந்தால்
பகமை இல்லாத
இடம் தேடி
பறந்தே போய் இருப்பேன்
காதல் கிளி அவளுடன்...

அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து 
தினம் தினம்
எண்ணங்களை கவியாக்கி
காதல் ராகம் பாடுகிறேன்
அவள் நினைவால்...

பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..

நித்தம் நித்தம்
பித்து பிடிக்க வைக்கும்
அவள் நினைவுகள்
செத்தும் பிழைக்கிறேன்
காதல் புரியும்
தர்ம கொலைகளில் இருந்து..

Wednesday, November 2, 2011

Share

மன்னித்துவிடு...



மனச்சாட்சியே இன்றி
இழைத்து விட்டேன்
பெரும் துரோகம் 
மன்னிப்பாயா? - இந்த
அறியாமையின் அசிங்கத்தை...

தனிமையின் கொடுமை
உணர்வுகளின் போராட்டம்
இழப்புகளின் இயலாமை
பாசத்தினை வலை விரிப்பு
தவிப்புகளின் அதிகரிப்பில்
இழைத்து விட்டேன்
பெரும் சங்கடத்தை..

மனதிலே ஆயிரம் வலி
ஒவ்வொறாய் சொல்லிட
ஓராயிரம் அழைப்புகள்
பயனற்று போனது 
எதிர்பார்ப்புகள்.
அசுரனாய் மாறிய என் மனம்
அழிந்து விட்டது 
உன் நிம்மதியை..
வருந்துகிறேன் இப்போது
அங்கணப் பொழுதுகளை எண்ணி..

கனவில் கூட நினைத்தில்லை - உன்
கண்ணீரில் கவி பாட
இடியாய் இன்னும்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
என் இதயம் - உன்
அழுகையின் ஓசையிலே..
மன்னித்து விடு என்னை..

Thursday, October 27, 2011

Share

மெளனம்



உன் சுட்டுவிரல் 
காட்டும் திசை நோக்கி
பாய்ந்தோடும் என் மனசு - இன்று
கற்களிலும் முட்களில்
சிக்கி தவிக்கும் நிலையினை
நீ அறியாயோ...

நேற்றுவரை நீ
என்னோடு இருந்த
பசுமையான நினைவுகள்
இன்று பற்றி எரிகின்றது
ஆயிரம் எரிமலையாய்..
நெருப்பாற்றை கடக்கும்
நிலையறியாது தவிக்கும் 
என் நிலை அறியாயோ...

என் வாழ்வின் வெற்றிகள்
உன் உத்தரவின்றி
என்னை முத்தமிட்டதில்லையே..
 இன்று
சாபங்களே வரமாய்
தோல்விகளே நிரந்தமாய்
வலியே வாழ்வாய்
துடி துடிக்கும்
அபலையின் அழு குரல்
உன்னை தீண்டவில்லையா?

என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை...

Tuesday, October 25, 2011

Share

தீபாவளி வாழ்த்துக்கள்



வலையுலகில் 
தடம் பதிந்தது 
சிகரத்தினை நோக்கி
வீறு நடை போடும் எனக்கு
ஆக்கமும் ஊக்கமும் 
அளித்து ஆதாரிக்கும்
வலையுலக நண்பர்களுக்கு
என் இதயம் கனிந்த
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்....

Friday, October 21, 2011

Share

வாழ்க்கை பயணம்...



மனித வாழ்வில்
எண்ணில் அடங்கா ஆசைகளை
எண்ணி எண்ணி வடிவமைத்தாலும்
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றியே செல்கின்றது
வாழ்க்கை.

கற்பபை வாசலில் இருந்து
துளிர்விடும் தருணம் முதல்
நான்கு கால்களில்
ஊர்வலமாக செல்லும் வரையில்
எத்தனை உறவுகள் 
பாச வலையில்
பாலம் அமைக்கின்றன...

தாயின் வடிவில்...
தந்தையின் வடிவில்...
சகோதர வடிவில்...
காதல் வடிவில்...
நட்பின் வடிவில் என...
விரிந்தே செல்கின்றது
வாழ்க்கை பயணம்...

சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து 
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...

உறவுகள் இன்றி
உயிர் துடிக்கும் 
உறவு ஒன்று - இங்கே
தொடங்கிய பயணம்
முடிவினை நோக்கி
காலியான வண்டியாய்
தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி.....

Sunday, October 16, 2011

Share

அரவணைப்பு..



உன்னோடிருந்த
ஒரு சில 
ஒன்றரை நிமிடங்கள்
மட்டும்...
இன்னும் இதயத்தில்
பக்குவமாய்....
உன்னை
கண்டியணைத்ததை விட
 உன் கண்ணீர்துளிகள்
துடைத்ததே அதிகம்.....

Tuesday, October 11, 2011

Share

உன் பிரிவால்...



என் வாழ்வின் அர்த்தங்களை 
உணர வைக்க 
உதயமான உறவொன்று 
திசைமாறும் வேளை
தடுமாறுகின்றேன் 
தனிமை எனும் கொடுமையில்..

இதயங்களின் சங்கமிப்பில்
அன்பினை பரிமாற்றி
பாசத்தில் பிண்ணி பிணைந்து
வாழ்க்கை எனும் கடலில் - என்
கண்கள் வளர்ந்திட்ட 
கனவுகள் இங்கே
காணல் நீராய் போனதடி 

உயிரே நீ என
உணர்வோடு வாழும் எனை
விதியே நீ என
தெருவோரம் வீசியதில்
துடி துடிக்குது என் இதயம்.
உணர்வினை ஊமையாக்கி
உறவுகளுக்காய் சிரித்து - என்
உள்ளம் வடிக்கும் கண்ணீர்
உதிரத்தில் சங்கமிப்பதால்
தினம் தினம் 
மரணித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பிரிவால்...

Monday, October 3, 2011

Share

தவிப்பு..


என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று
என் வாழ்வில் நிரந்தரமாய் ஆனது

நான்கு சுவர்களுக்கு
நாட்களும் அதுவாய் கழிக்கின்றது..
பூத்துக் குலுங்கிய பூங்கா வனம்
இன்று புழுதி பல படிந்து
குருதியில் தோய்ந்த
போர் நிலமாய் என் வாழ்க்கை....

தனிமையாய் இருந்திருந்தால்
தவிப்புகள் குறைந்திருக்கும்
காதல் எனும் வடம் பிடித்து
காணாமல் போனவர்கள் பல பேர்
இதில் கடைசியில் நானும்
இணைந்து கொள்ளும் கொடுமை இதுவோ

ஆடிப் பாடி திரிந்த இடமெல்லாம
ஆள் அரவமற்று
அமைதியாய் இருப்பதாய் ஓர் பிரமை.
கை கோர்ந்து நடந்து திரிந்த
கடற்கரையோர கடலலைகள்
எள்ளி நகையாடுகின்தே
என் நிலை கண்டு...


நிலவினை ரசிக்கையில்
உயிரான அவன் நினைவுகள்
எரிமலையாகி என்னுள்
அணு அணுவாய் உயிர் பறிக்கும்
கொடுந் துயர் இதுவோ...

நீண்ட இரவினால்
நிம்மதியின்றி தவிக்கும்
தலையணையுடன்
சேரந்து என் மனசும்..

Friday, September 23, 2011

Share

முத்தம்...



அந்தி சாயும் நேரம்
அன்று கடற்கரையோரத்தில்
கடலலை எமை நனைக்க
இயற்கையின் படைப்பில்
எம் கண்கள் வியக்க
அதை கண்டு நிலா
கண் சிமிட்ட
முகில்கள் தன் கண்னை மூட
சத்தமின்றி நீ
பதிந்த முத்தம்
காயவில்லை இன்னும்...

Sunday, September 18, 2011

Share

விவாகரத்து...



பேசி பேசி பார்த்தாச்சு
பேச்சும் முடியவில்லை
முடிவும் எட்டவில்லை
ஓர் முடிவினை நோக்கி
பல விதங்களில் பேச்சு
விடிய விடிய பேசினர்
விடித்த பிறகும் பேசினர்.

விரிசல்களும் அதிகரித்தன
விரக்தியுடன் வலி அதிகரிக்க
தொடர்ந்தனர் தம் பேச்சை
இருந்தும் முடிவு எட்டவில்லை
அன்பாக பேசினர்
அதிகாரமாக பேசினர்
எல்லை மீறியும் பேசி பார்த்தனர்
தீர்வு ஏதும் எட்டவில்லை
சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது
காதல் இங்கு கபடமானது
வாழ்க்கையே சூனியமானது.

இதற்கு பிறகும்
பேச்சு எதற்கு?
இரு மனங்களுடன் உறவாடி
தீர்க்கமான முடிவை எட்டினர்
கணவன் - மனைவி எனும்
உறவை விடுத்து
நண்பர்களாக வாழ என...

Saturday, September 10, 2011

Share

தாய்மை....


இதம் தரும் உணர்வுகளுடன்
அனுதினம் கலண்டர் கிழிக்கையில்
அச்செய்தி கிடைத்திடுமோ - என
ஏங்கத்துடன் இருந்த அவள்,

ஆண்டு பல கடந்தும் - அவள்
புரிந்திட்ட நன்மையின் விளைவால்
ஆண்டவனின் அருளால்
அவள்தன் தங்க வயிற்றில்
குட்டி நிலா துயில் கொள்ள
தனியான இடம் அமைத்து
பெண்மைக்கே பெருமை சேர்க்கும்
தாய்மை என்னும் உறவுக்குள்
நகர தொடங்கி விட்டாள்
இன்று முதல்...

வெறுமையாய் இருந்த அவள்
முழுமையாயாய் ஆனாதினால்
ஆனந்தத்தில் மூழ்கியே
சரணடைகின்றாள் தன்
கணவன் மடியில்....

பிரிவால் துவண்டு இருந்த
உறவினர் முகங்களிலே
ஆயிரம் மின்னல் அடித்திடும்
புன்னகையின் பிரதிபலிப்புக்கள்..

குட்டி நிலவின்
வரவை எண்ணி
கலண்டரின் அருகில்
காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...

Monday, September 5, 2011

Share

சில்மிஷம்.....



வெறுமை என்னை
ஆட்கொள்ளும் தருணங்களில்
துணைக்கழைக்கின்றேன்
உன் நினைவலைகளை
அது என்னை
சீண்டுவதும்
கெஞ்சுவதும்
கொஞ்சுவதும்
அடிமையாவதும்
உணர்வுகளை தூண்டுவதும் - என
தொடர்கின்றது சில்மிஷங்கள் - நீ
என் அருகில் 
இல்லாமல் போனாலும்கூட...

Tuesday, August 30, 2011

Share

இன்றைய மனித வாழ்வு...

நிஐயங்கள் கூட
நிழலாகி போகின்றது
நிதர்சனங்கள் கூட
நிச்சயமற்று போனதால்
நிம்மதி இழந்து
நிலை குலைந்து
நிர்க்கதியற்று போனது
இன்றைய மனித வாழ்வு....

Sunday, August 28, 2011

Share

வாழ்க்கை சிறையில்...

 "அழகை விடுத்து
அறிவை நேசித்தேன்...."
"பணத்தை விடுத்து
பாசத்தை நேசித்தேன்..."
"ஆடம்பரத்தை விடுத்து
அடக்கத்தை நேசித்தேன்..."
"ஆணவத்தை விடுத்து
அன்பை நேசித்தேன்...."
இருந்தும் இன்று
வாழ்க்கை என்னும் சிறையில்...
தூக்குத் தண்டனை கைதியாக........
Share

தாமரை போல்...

 சூரியன் உதயத்திற்கு
காத்திருக்கும்
தாமரை போல்...
உன் மார்பில் சாய்ந்து
ஆதங்கம் தீர்ந்திட
காத்திருக்கிறேன்
உன் நினைவுகளுடன்...!

Thursday, August 25, 2011

Share

சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

இவ் உலகில் என்னையறிந்து
அன்பெனும் சிறகினை தந்து
உறவெனும் உரிமை தந்து
உயரப்பறக்க வைத்தாய்
உல்லாசமாய் ரசித்து சிலிர்க்கையிலே
அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

குடும்பமாய் கூடு கட்டி
வாழ்ந்திட ஆசைகொண்டேன்

மரமான உன்னை தாக்கியது யாரோ-ஆனால்
கூட்டை தாக்கியது நியே...!
விதியா இல்லை சதியா தெரியவில்லை
கூடு இழந்து தவிக்கும் என் சிறகினை
மீ்ண்டும் மீண்டும் பறிக்கின்றாய்....!
பறக்க தான் நினைக்கின்றேன்
மரமாய் என்னை தாங்கும்
உன்னை விட்டு பறப்பதற்காய் அல்ல
உன் உணர்வுகளை மதிக்கும்
ஓர் பறவையாய்.....!

அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி  அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு
மீண்டும் உன்னில் கூடு கட்டி 

உறவாடிட உதவிடு
சிறகொடிந்த பறவையாய் காத்திருப்பேன்
உனக்காக அல்ல
நீ தரும் அன்பெனும்  சிறகுக்காய்......

Monday, August 22, 2011

Share

தோழியே!!!



அன்பினிலே.
தாயின் மறு உருவமானாய்
தந்தையின் பொறுப்பானாய்
அறிவுரையில் அக்காளானாய்
அதட்டுதலில் அண்ணானாய்
சம உரிமை அளித்திடும் தங்கையாய்
அறிவுரை சொல்லுகையில்
என் பாட்டி கூட - உன்னிடம்
பாடம் கற்கும் ஆசானாய்
தோழியே!!!
ஒரு உருவில் என்
குடும்பததைக் கண்டேன் உன்னில்....

காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு
பூவாய்....
பிஞ்சாய்...
காயாய்....
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே...

மாற்றம் என்பது மாறாததொன்று - இது
யாவரும் பிதற்றும் கோஷம்
வேண்டவே வேண்டாம்
மாற்றத்திற்கு புது அர்த்தம் கொடுபோம்
கை தொடுத்திடு என்னுடன்
நட்பில் ஏது வேற்றுமை
உலகிற்கே பறைசாற்றுவோம்
வெற்றி கோசம் முழங்குவோம்
இமயத்தையும் தாண்டி
விசாலமானது நம் நட்பு என்று....