Friday, November 11, 2016

Share

புன்னகைக்கு பஞ்சமிங்கு...!

என்னையறியாது
ஏதோ  ஒரு ஏக்கம்..!!!
ஏழ்மையாய் என் உள்ளம்
ஏதுமறியாது தவிக்கிறது...!!!
ஏக்கமது இறக்கிபிடிக்கிறது
உள்ளமது உறங்க மறுக்கிறது..!!
விடைதேடி வினவுகின்றேன் 
விடைதர யாரிங்கு....??

கண்ணீருக்கு கருவுண்டு
கருத்துடன் கண்டுவிட்டால்
காலமது கனித்திடும்
காதலும் இனித்திடும்-இருந்தும்
வினவிடவும் மனமும் இல்லை
விடைதேட முயலவில்லை..!!

புரிந்துணர்வு குறைந்ததினால்
புன்னகைக்கு பஞ்சமிங்கு...!
இரக்க குணம் வற்றியதால்
இரணியனாய் பலர் உள்ளம்..!!
நீரில்லா குளத்தினிலே 
இரைதேடி  அலைகின்றேன்..!!

விடைதேடி அலைகின்றேன்
கிடைக்குமென்ற நம்பிக்கையில்..!!

tholi Pirasha
11.11.2016

Sunday, October 30, 2016

Share

என் வாழ்க்கை.

நான்கு சுவர்களுக்கு  நடக்கும்
அரச ஆட்சிக்கு
மாற்றம் ஒன்றை
வேண்டி நின்றேன்.
நகரத்தை மட்டுமன்றி
உலகையும் எதிர்கொள்ள
தற்துணிவு கொண்டு
களமாட எண்ணினேன்
காலத்தின் சுழற்சியும்
குடும்ப பிணைப்பும்
சூழ்ந்திருப்போரின் சதியும்
கட்டிப் போட்டு
தனிமையாக்கின
வெளிநாட்டு வாழ்க்கை எனும்
தாரக மந்திரத்திற்குள்....


Tholi Pirasha

31.10.2016