Saturday, September 4, 2010

Share

பிடித்திருக்கிறது எனக்கு...

 விடியும் விடியல் பிடிக்கவில்லை
உதிக்கும் சூரியன் பிடிக்கவில்லை
பூக்கும் பூக்கள் பிடிக்கவில்லை
வீசும் காற்றும் பிடிக்கவில்லை

உருண்டு ஓடும் அலைகள் பிடிக்கவில்லை
அலைந்து திரியும் காதலர்களையும் பிடிக்கவில்லை
சினிமாவும் பிடிக்கவில்லை
சின்னதிரையில் அழுது புலம்பும் நாயகிகளையும் பிடிக்கவில்லை

தினம் சினுக்கும் அலைபேசிகள் பிடிக்கவில்லை
தொல்லை தரும் எஸ்எம்எஸ்கள் பிடிக்கவில்லை
இம்சை தரும் இமெயில்கள் பிடிக்கவில்லை

தனிமையும் பிடிக்கவில்லை
இனிமையும் பிடிக்கவில்லை
உறவுகள் பிடிக்கவில்லை
அழும் குழந்தையும் பிடிக்கவில்லை

அழகான என் காதலும் பிடிக்கவில்லை
இனிமையான நட்பும் பிடிக்கவில்லை
என்னை பிடித்த உன்னையும் பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த என்னையும் பிடிக்கவில்லை

நான் ரசித்த எதுவும் பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காத மரணத்தை மட்டும்
ஏனோ பிடித்திருக்கிறது எனக்கு...

4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த கவிதையை எனக்கு பிடிக்கவில்லை.. பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன்...

பிடித்திருக்கிறது.... கடைசி வரியை தவிர அனைத்தும் அருமை....

மரணம் மதியிழந்த மூடர்களின் மருந்து..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஏனோ பிடித்திருக்கிறது எனக்கும்

aavee said...

கவிதை நடை நன்றாக இருக்கிறது. ஒரே சொற்கள் திரும்ப திரும்ப வருவதால் சற்று சோர்வைத் தருகிறது!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நண்பர்களே...
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...
உங்கள் வருகையும் பின்னூட்டங்களும் என்னை உங்சாகப் படுத்துகின்றன. தொடர்ந்து வாருங்கள்
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..
நன்றி நண்பர்களே.

தோழி பிரஷா