Tuesday, September 28, 2010

Share

அன்று ஒருகாலம்

அன்று
என் வாழ்வின் 
வசந்த காலம்
அவள் என்னருகில்
ஆனந்தத்திற்கு 
எல்லையே இல்லை

சுமைகள் கூட இதமாய் இருந்தன
இருட்டில் கூட வெளிச்சமாய் அவள்
என்னைச் சுற்றி எங்கும் பட்டாம்பூச்சி
சிறகுகள் முளைந்த பறவைகளாய்
ஆனந்தத்தில் பறந்து திரிந்தோம்.

அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்

ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்

இன்பம் என்னும் போதையை
என்னுள் உணர வைத்த
வசியக் காரி அவள் என்
காதலி....

5 comments:

கருடன் said...

//ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்//

nice...

Anonymous said...

காதலின் நிமிடங்கள் அருமை தோழி!

Praveenkumar said...

//அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்//

ம்..ம்.. அருமைங்க. இன்னும் நிறைய எழுதுங்கள்

Kousalya Raj said...

nice too....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பர்களே.....