Monday, September 20, 2010

Share

உன் ஸ்பரிசங்களால்.....

 என்னில்
பல அதிசயங்கள்
நிகழ்த்திய கடவுள் நீ

நீ என்னருகில்
உன் ஸ்பரிசங்களின்
தீண்டல்களால் உண்டான
இன்பம் அரவணைத்து 
கொள்கின்றது என்னை....

நானோ சந்தோசத்தில்
துள்ளி குதிக்கிறேன்
கட்டி தழுவுகிறேன்
சற்று நேரத்தில்
எங்கும் வெறுமையாய்
கண் விழித்துப் பார்க்கிறேன்
வெட்கத்தில் கண் சிமிட்டுகின்றது
என் தலையணை
என் அறியாமைய் கண்டு...

கரை தொடும் அலை போல்
உன் நினைவலைகள்
என்னில் ....

9 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி தொடர்கிறேன்.........

கவி அழகன் said...

"சற்று நேரத்தில்
எங்கும் வெறுமையாய்"
நான் நினைக்கிறேன் தனிமை உங்களை வாட்டுகிறது
தயவு செய்து உங்கள் தனிமையை நல்ல நம்பிக்கைக்குரிய நட்பிடம் பரிமாறுங்கள்
அமைதியான வாழ்வுக்கு நான் இறைவனை பிராத்திக்கிறேன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

முயற்சிகிறேன்.. நன்றி நண்பா.......

கருடன் said...

நல்லாதான் எழுதி இருக்கிங்க. ஆன உங்க ப்ளாக் உள்ள வரவே பயமா இருக்கு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

TERROR-PANDIYAN(VAS) said...
நல்லாதான் எழுதி இருக்கிங்க. ஆன உங்க ப்ளாக் உள்ள வரவே பயமா இருக்கு...

ஏன் நண்பரே??????? உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே......

Anonymous said...

//உன் ஸ்பரிசம்...//
அருமை தோழி!

யோகி said...

"கரை தொடும் அலை போல்
உன் நினைவலைகள்
என்னில் ...." - நல்ல கற்பனை!

கருடன் said...

//ஏன் நண்பரே??????? உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.....//

லவ் சொன்னா அலர்ஜி.... தேம்பி தேம்பி அழ வைக்கும்... காதல் சுகமான வலினு சொல்லிகளாம். ஆன உயிர் போறது அதை அனுபவிக்கரவனுக்கு தான் புரியும்...

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்