Tuesday, March 22, 2011

Share

விதியின் வழியில்..



வாழ்வின் எல்லையை அறியாத
தொல்லைகள் புரியாத
துள்ளித் திரிந்திட்ட
பிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தை கொடுத்தவள்
கொள்ளை இன்பத்தில்
காதல் வளர்த்தாள்

கள்ளத்தனமின்றி
உள்ளச் சோகத்தோடு
செல்லக் கதைதனையும்
சேர்ந்தே பயின்றதினால்
சொர்க்கத்தின் படிகளில்
செல்கின்ற சந்தோசம் - அவள்
உள்ளத்தில் பளிச்சிட்டது

வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்

உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை....!

44 comments:

Learn said...

அருமையான வைர வரிகள் தோழி பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Anonymous said...

டும்டும்...டும்டும்..

விதி வலியது
அருமையான கவிதை

உளவாளி said...

அருமையான வரிகள்......

சக்தி கல்வி மையம் said...

தோழி.. எளிமையான தமிழில் கவிதை அருமை..

Unknown said...

Nice!

Yaathoramani.blogspot.com said...

"தூக்கிலிட்டுக் கொண்டதைப்போல்
ஏற்றுக்கொண்டாளோ மணமாலையை ..."
கடைசி வரியை நானாக
இப்படிச்சேர்த்துக் கொள்ளும் அளவு
இப்படைப்பு என்னைப் பாதித்தது
வழக்கம் போல் மிரட்டும் சொல்லாட்சி
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை .

தமிழ் 007 said...

ரைட்டு...

தமிழ் 007 said...

///வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு///

பதிவில் இந்த பாராவின் வடிவமைப்பு ஒரு கட்டிடம் போல் அழகாக உள்ளது. எதேச்சையாக அமைந்ததா அல்லது இவ்வாறு வர வேண்டுமென வடிமைத்தீர்களா?

தமிழ் 007 said...

காதலுக்கும் நமக்கும் கொஞ்சம் தூரமுங்க.

இப்போ தான் காதலிக்க பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் திரும்ப வந்து உங்கள் தளத்தில் உள்ள எல்லா காதல் கவிதைகளையும் படித்துக் கொள்கிறேன்.

உங்கள் தளத்தின் வடிவமைப்பு சூப்பர்!

சென்னை பித்தன் said...

//உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை....!//

உறவுகளுக்கு மகிழ்ச்சி! இவளுக்கோ,ஊனமான உணர்வுகள்!
அருமை தோழி பிரஷா!
பாருங்கள்-
http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_28.html

Unknown said...

சூப்பர்..

MANO நாஞ்சில் மனோ said...

//வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு//

அடடா.......

MANO நாஞ்சில் மனோ said...

//விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்//

நெஞ்சை தொட்ருச்சி....

நிரூபன் said...

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்//

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதை தட்டி
பாதி வழியில் திடைமாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு அழிந்திட
விலகியே சென்றிட்டான்//

என அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களின் கவிதை காதலானல் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுதனைச் சொல்லி நிற்கிறது.

எவனோ ஒருவன் said...

aetrukkolla mudiyavillai?
avargal thuninthirukkalamoa?
Brave deserves their Reward.

ellarum solra madhiri "nic, arumai"

sulthanonline said...

//உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை.//

பெண்ணின் உணர்வை வெளிப்படுத்திய அருமையான வரிகள்.

arasan said...

நல்ல வரிகளில் ஒரு நல்ல கவிதை .. வாழ்த்துக்கள்

Chitra said...

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்

........கவிதைகளில், வார்த்தைகள் அழகோ அழகு!

பனித்துளி சங்கர் said...

அழகாக இருக்கிறது கவிதை அலங்கரிப்பு அருமை . பகிர்வுக்கு நன்றி தோழி

ஹேமா said...

விரும்பினபடி வாழ்வு கிடைச்சிட்டா யாரும் கடவுளை நினைக்கமாட்டோம் தோழி !

இராஜராஜேஸ்வரி said...

ஏற்றிட்ட மணமாலை ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.

சுஜா கவிதைகள் said...

எத்தனையோ பெண்களின் மனதில் இது போன்று சொல்ல முடியாத வலிகள் உள்ளது பிரஷா.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ்தோட்டம் நன்றி யூஜீன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நையாண்டி மேளம் டும் டும் டும் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@உளவாளி நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... நன்றி ஜீ.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani ஆம் ஜயா... நன்றி உங்கள் தொடர்வருகை மகிழ்ச்சியளிக்கின்றது நன்றி பெரியவரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் 007 நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் 007 கவிதை எழுதும் போது கருவிற்கேற்ப அமைக்கபட்டது நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தமிழ் 007 :))) நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சென்னை பித்தன் நன்றி பெரியவரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு நன்றி பாபு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ நன்றி சகோ தொடர்ந்து வருகை தாருங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நிரூபன் ம் ம் ம் கருத்துக்கு நன்றி நிரூபன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sulthanonline நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன் நன்றி அரசன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஹேமா உண்மை தான் அக்கா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இராஜராஜேஸ்வரி நன்றி சகோதரி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சுஜா கவிதைகள் உண்மை தான் சுஜாக்கா மனதுள் புதைத்து வாழ்கின்றனர்

சம்சுதீன் said...

உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை

வரிகள் அருமை