Monday, March 14, 2011

Share

புரியாமல் புலம்புகிறேன்

 வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்

தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து

புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்

தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்

கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....

45 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Awesome....

:)

MANO நாஞ்சில் மனோ said...

//உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....//

ஆஹா அருமையான வலி.....

MANO நாஞ்சில் மனோ said...

//பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்//

அருமை அருமை.....

settaikkaran said...

கவிதை பிரவாகமாய் கரை புருளுகிறது. வாழ்த்துகள்.

(ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன!)

சி.பி.செந்தில்குமார் said...

ஒரே காதல் கவிதையா போட்டு தாக்கறீங்களே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்கள் தேடல்களின் ஏக்கம் கவிதைகளில் பிரிதிபலிக்கிறது..

வாழ்த்துக்கள்..

Harini Resh said...

//தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து//
Arumayaana varigal Prasha

ரேவா said...

தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்கள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்............கவிதை நன்றாக இருக்கிறது தோழி

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை..!

Nagasubramanian said...

nice

Unknown said...

வார்த்தைகளெல்லாம் சும்மா சரமாரியாப் போட்டுத்தாக்குறீங்களே!! எப்புடி? :-)

ம.தி.சுதா said...

பிரிவுகள் கொடுமையானவை தான் அதை மறைக்கவோ மறக்கவோ முடிவதில்லைத் தான்...

arasan said...

தோழி நான் ரொம்ப ரசித்த கவிதை ,.
நல்ல வரிகளில் நல்லதொரு கவிதை ...

வசந்தா நடேசன் said...

//காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....//

வழக்கமாய் உங்கள் பதிவுகளை படித்து விட்டு சென்றுவிடுவேன்.. இன்று எழுதவைத்துவிட்டது மேலுள்ள வரிகள்.. காதல் ரணங்கள்.. வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@♔ℜockzs ℜajesℌ♔™ நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@MANO நாஞ்சில் மனோ உங்கள் தோடர் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. நன்றி சார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சேட்டைக்காரன் மிக்க நன்றி சேட்டைகாரா.. பிழைகளை சரி செய்கின்றேன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் காதல் கவிதைகளுக்காவே ஆரம்பித்த தளமாச்செ சார். :)

Unknown said...

மிகவும் அருமையான கவிதைங்க..

ரொம்ப டச்சிங்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி சார்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரேவா நன்றி ரேவா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Nagasubramanian நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... முயற்சிதான் ஜீ.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@♔ம.தி.சுதா♔ உண்மை சுதா. நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன் நன்றி அரசன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வசந்தா நடேசன்வருகைக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வசந்தா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு மிக்க நன்றி பாபு

சக்தி கல்வி மையம் said...

வலி மிகுந்த... அருமையான கவிதை...

சென்னை பித்தன் said...

//தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)//
”கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர் கடுகாம்! ”
ஆனால் அவளே தவிக்க விட்டுச் சென்றால்?!
நல்ல கவிதை

Sriakila said...

அருமையோ அருமை!

Yaathoramani.blogspot.com said...

இந்தப் புலம்பல் இருவருக்கும் பொதுவானது
என்பதைக் குறிக்கத்தான் னே( ளே )எனப்
போட்டிருக்கிறீர்களோ
நல்ல படைப்பு தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

FARHAN said...

//புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்//

போகிற திசை எல்லாம்
உன்முகம் தெரிந்தால்
எந்த திசை கொண்டு
உன்னை நான் அடைவேன்

(இது இந்த கவிதையை சுட்டு ஒருத்தருக்கு அனுப்பியதும் அங்கிருந்து வந்த கவிதை )

தூயவனின் அடிமை said...

வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சூப்பரா இருக்கு பிரஷா! ஆழமான வரிகள்! எப்பவுமே உங்கள் கவிதையில் ஒரு சோகம் இருக்கிறதே? ஏன் ?

ஹேமா said...

பிரிவின் துயரும் தேடலும் வார்த்தைக்ளுக்குள் ஏக்கமாய் நிரம்பிக்கிடக்கிறது தோழி !

நிரூபன் said...

கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....//


பிரிவின் வலியில் அகப்பட்ட மெழுகாதித் துடிக்கும் ஓர் ஜீவனின் முகாரி ராகமாய் அழுகிறது கவிதை. அருமையான வரிகளை எழுதுகிறீர்கள். ஆனால் தொடர்ச்சியாக ஒரு தலை இராகம் பாடுவதற்கு கண்டனங்கள். இடைக் கிடை கலந்து மாறி, வேறு கவிதைகளையும் எதிர்பார்க்கிறோம்.

சிந்தையின் சிதறல்கள் said...

வாவ் என்று வாய்திறக்கச்செய்கிறது வரிகள்
அருமையான காதலுணர்வுகள்
வாழ்த்துகள் தோழி

என்வீட்டிலும் ஒரு காதலேக்கமிருக்கிறது வந்து பாருங்கள்

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதைபடித்த திருப்தி கிடைத்தது. ஏன் நிறைய சோக மான கவிதையாகவே எழுதரீங்க தோழி.

TamilTechToday said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Prabu Krishna said...

தேடி தேடி வார்த்தை பிடித்து கவிதை எழுதுவீர்கள் போல.

Unknown said...

நான் ரசித்த வரிகள் இவை....
கவிதை நன்றாக இருக்கிறது....

Unknown said...

//தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து//

logu.. said...

நல்லாருக்குங்க..