Thursday, April 14, 2011

Share

நாமும் வாழ்த்துவோம்..

 எனது நண்பன் சிறு வயிதினிலே தாய் தந்தை இழந்து தனித்த போது தாய்க்கு தாயாக இருந்து வாழ்வில் வழிகாட்டி சென்ற தனது அப்பம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தினை கவிதையாய் இங்கே பகிர்கின்றான்.
85 வது பிறந்தநாளை கொண்டாடும்  அப்பம்மாவுக்கு  எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
பாசத்தின் உறைவிடமே
பரந்த இப் பூமிகூட
போதுதில்லையும்
பாசத்திற்கு எல்லை சொல்ல...

தாய்மடி இழந்த போதும்
தலைவலி உணர்ந்த போதும்
உம்மடியே தந்து
உயிர் காத்த அன்னை நீ...

தந்தைதனை எமக்களித்து - எம்
தந்தையுமாய் தான் இருந்து
அறிவுரைகள் பல பகிர்ந்து
அகிலமதை திகழ வைத்தீர்...

கல்விக்கு ஆசானை
கடமையிலே சேவகியாய்
நோயுற்ற வேளையிலே
உடனிருந்து தாதியுமாய்
தோள் கொடுத்தே தோழியுமாய்
அப்பம்மா என்னும் உம்வுறவில்
அப்பா, அம்மா அன்புடனே
அறிந்து கொண்டோம்
பாசத்தின் பல வகையை
உங்கள் ஓர் உருவில்.

நாம் வாழும் காலமெல்லாம்
வளமுடனே எம்மருகே
எந்நாளும் நீர் இருக்க
நாளும் நாம் நலம் வாழ - நீங்கள்
தினம் அழைக்கும் ஆண்டவனை
நாமும் அழைத்தே
வரம் வேண்டி வாழ்த்துகின்றோம்..

-கம்ஷன்.-

19 comments:

Chitra said...

85 வது பிறந்தநாளை கொண்டாடும் அப்பம்மாவுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.


...So Sweet!


அருமையான கவிதை


HAPPY BIRTHDAY!!! :-)

சாகம்பரி said...

இணைபிரியா இனிய நூற்றாண்டுகள் காண நானும் வாழ்த்துகிறேன்

சிவரதி said...

வாழ்வின் வழிகாட்டியாக
வையமதில் நாம் சிறக்க
வாழும் காலமெல்லாம்
வாழ்நாளை எமக்களிக்கும்
அன்புத் தெய்வங்களை(அப்பம்மாவை)
அன்புடனே நாமும்
வாழ்த்தி வணங்குகிறோம்...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பாசமலர் கவிதை...நெஞ்சுருக வச்சிட்டீங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை..
மற்றும் வாழ்த்துக்கள்..

Avargal Unmaigal said...

அந்த அம்மம்மாவை நானும் வாழ்த்தி வணங்குகிறேன்.

Jana said...

வேருக்கான விழுதின் கவிதை அருமை

Prabu Krishna said...

எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் தோழி.

Yaathoramani.blogspot.com said...

அப்பம்மா வளமோடும் நலமோடும்
நூறாண்டு வாழ
ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்
நல்ல வாழ்த்துப் பா
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

நல்ல கவிதை.வாழ்த்து சொல்ல வயதில்லை என்றாலும் பல்லாண்டு வாழ வேண்டும் பெற்றோர்கள்

ஜெயசீலன் said...

அம்மாவிற்கு என் உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்... கவிதைக்கும்...

சிவகுமாரன் said...

வணங்குகிறேன் உங்கள் அப்பம்மாவை. எங்களையும் ஆசீர்வதிக்கச் சொல்லுங்கள். ( நாங்கள் அப்பத்தா என்று சொல்லுவோம் )

ஹேமா said...

அப்பம்மாவுக்கு என் வணக்கம் !

Mahan.Thamesh said...

உங்கள் அப்பம்மாவுக்கு எனது வாழ்த்துக்கள்; கவிதை சுப்பர்

ஆனந்தி.. said...

அப்பம்மா ன்னால் அப்பாவோட அம்மாவா பிரஷா..?? உன் கவிதை படி அப்பாவின் அம்மா தான்..:))ஓ..நாங்க பாட்டி அல்லது அப்பத்தா சொல்லுவோம்...சரி என் அப்பத்தாக்கு இந்த பேத்தியின் வணக்கங்கள்...

Anonymous said...

அந்த அன்புத்தாய்க்கு என் வாழ்த்துக்களும்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எங்கள் அப்பம்மாவை வாழ்த்திய..சித்தராக்கா.சாகம்பரி . சிவரதி.MANO நாஞ்சில் மனோ சார்.# கவிதை வீதி # சௌந்தர். Avargal Unmaigal.Jana .பலே பிரபு.Ramani ஜயா.thirumathi bs sridhar .ஜெயசீலன். சிவகுமாரன். ஹேமா அக்கா. Mahan.Thamesh. ஆனந்தி.. அக்கா. ஆர்.கே.சதீஷ்குமார் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ....

ஆனந்தி.. said...

தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..

http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html

நிரூபன் said...

கம்ஷனின் வாழ்த்துக் கவிதையுடன் இணைந்து நானும் அம்மம்மாவை நீடுழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்.