Tuesday, September 25, 2012

Share

எப்போ என்னை விட்டு செல்வாய்??


வேதனைகளை 
வேரோடு கிள்ளி 
வீசிட நினைக்கிறேன் 
இருந்தும்,
வீசும் காற்றாய் என்னை 
தொட்டுச் சென்றிடும்
ஆசைகளுக்கு தூபமிட்டு
அமைதியை சீர்குலைக்கும்
துன்பமே!
எப்போ என்னை 
விட்டு செல்வாய்??