Wednesday, September 26, 2012

Share

துடிக்குதம்மா என் உள்ளம்



ஆயிரம் துன்பங்கள்
அயராது தாக்குது
ஆடித்தான் போகின்றேன்
அன்னையே உன்னை எண்ணி...
பிள்ளையாய இருக்கையில்
அம்மா உங்கள் 
கஸ்ரம் புரியவில்லை..
அன்னையாய் நானின்று ஆனபின்பு
பிள்ளையாய் உன்னை தாங்க 
ஆசையின்று...
அழைக்கும் தூரத்தில்
நீங்கள் இல்லை...
துடிக்குதம்மா என் உள்ளம்
விம்மி அழும் உன் குரல் கேட்டு....!!!