Tuesday, July 13, 2010

Share

நம் காதல்

என்னை அறியாமல்
என் மனதில் இடம் பிடித்தாய்!
இன்பங்கள் பல அள்ளி தந்தாய்...

அன்பே........
ஏழை இவள் இதயத்தில்
ஏன் நீ குடிவந்தாய்?
பாசத்தை அள்ளி தந்தாய்
சந்தோசமே என் வாழ்வென
எண்ண வைத்தாய்...

இன்று....
இறகு தொலைத்த பறவைபோல
தேடுகிறேன் உன்னை
கனவாகி போனது எம் காதல்
யாருக்கும் தெரியாமல்
என் உயிரில் கலந்த
உன்னை மட்டும்.....
மறக்க சொல்லுது விதி
நாம் பிரிந்தாலும்-நம்
காதல் பிரியாது.

2 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

சோகம் உண்மைக்காதலாய் வரிகள்
மாறாக்காதல் மடியும்வரை வாழட்டும்

மிக அருமை
பாராட்டுகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே தொடர்ந்தும் வாருங்கள் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்,