Friday, July 9, 2010

Share

சாபம்....

ஏனிந்த கோபம்...
என் மேல்
ஏனிந்த சாபம்
எனக்கு !!!....

அனுப்பி இருந்தேனே
என் கனவை....
காணவில்லையோ
நீயும் அதனை....

சொல்லிவிட்டேனே
தூது... அதனை ...
சொல்லவில்லையோ
அந்த நிலவு !!!...

நீர்..
ஊற்றாக பொங்குதே
உன் நினைவு...
அடக்கவும் முடியவில்லை...
அலை பாய வழியும் இல்லை....

நீறு பூத்த நெருப்பாக
உன் உருவம் !!!...
உள்ளில்...
நீர் தெளிக்க ஆளில்லை
ஈரமாக நீயும் இல்லை.....

சூன்யமாக
போகும் முன்னே
வந்து விடு !!!... நானும்
சூடமாக
கரைகின்றேன்
காற்றினிலே !!!....

3 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான வரிகள் ..

வாழ்த்துக்கள் சகோதரி..

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை வாழ்ததுகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி நண்பர்களே..............