Saturday, July 17, 2010

Share

உயிரோடு கலந்து விட்டாய்

கற்பனைத் தந்திகளை மீட்டுகையில்
கானமென இசைமீட்டிடும்
கவிதை நீயெனக்கு....

என் மூச்சுக் காற்றில் கலந்து
இதயத்தோடு கலந்து சில்மிஷம்
செய்திடும் உயிரும் நீ...

கண்மூடி திறக்கையில்
நிழலாடி வரும் உன் உருவம்
காண்கையில் காணமல் போகின்றது
கண்களில் கண்ணீர்த் துளிகள்...

தித்திக்கும் கனவுகளில் திகட்டாமல்
கண்சிமிட்டிச் செல்லும் கண்மணியே
கண்களைத் தீண்டி கனவோடு கலந்து
உயிருக்குள் நுழைந்து விட்டாய்...


0 comments: