Wednesday, July 21, 2010

Share

ஏற்றுக்கொண்டேன்

சொல்லாமல்
என்னில்
ஊடுருவி ...
தினம் சுற்றி வரும்
மதியாகி ...

தீராத உயிர் கவிதை
கருவாகி ...
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி ....

 
பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே ...

இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய் ...

2 comments:

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை ......வாழ்த்துகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றது.