Monday, July 5, 2010

Share

உன் மெளனம்......


அன்புக்கேது அளவுகோல்
அளந்தளந்து அன்பு வைத்திட....

நிலவு தேய்ந்திட
வானம் அழுவதில்லையே - நீ
தேய்வதால் நான் அழுகின்றேன்......

தேய்ந்திட்ட நிலவு வளர்ந்திட
மலர்ந்திட்ட பூ வாடியதே
உன் சினம் கண்டு.....

மழை நீரென அன்பை நீ பொழிந்திட
சிலிர்த்துப் போகுதே எனதுயிர்....

கனிந்திட்ட பழமென இனித்திடும்
உன் புன்னகையின் தித்திப்பில் என்னிதயம்....

என் பூவாசல் தேடி வந்த தேவதையே
உன் அன்புக் கனிகளை
மரமென விதைத்திடு என் மனதினிலே
என் ஆயுள் முழுவதும் புசித்திடுவேன்...

என் தேகம் தீண்டிடும் தென்றல் காற்றே
என்னுயிரின் தேகம் தீண்டி வந்தாயா
என் ஆருயிரின் ஸ்பரிசம் உன் தீண்டலில்.....

பூக்களே பூக்களே - என்
கவிதையில் மலர்ந்திட்ட பூக்களே
என்னவள் கூந்தலில் அடைக்கலம் தேடுங்கள்
உயிர்த்திடுவீர்கள் என்னவள்
தொடுகையில்....

உன்னோடு நான் பேசியதை விட
உன் மெளனத்தோடு இரண்டறக் கலந்தது
அதிகமன்பே...

உன்னை விட - உன்
மெளனம் பிடிக்குமெனக்கு
என்னை அணுஅணுவாய்
சித்திரவதை செய்வதால்...

அதில் கூட சுகமுண்டு உயிரே
என் உயிரே நீயாகி போனதால்.....

1 comments:

கவி அழகன் said...

நல்ல ரசனை வாழ்த்துக்கள்