Thursday, January 24, 2013

Share

பாவப்பட்ட ஜீவனாய்



விடியாத இரவுகளில்
இருண்டே கிடக்கும்
வாழ்வின் உண்மைகள்
சொல்ல மறந்த கதையாய்
தொடர்கிறது.
இனிக்க இனிக்க 
என்னுள் புதையுண்டு
அவனின் பரிசங்கள்
இன்று
வலிக்க வலிக்க
வெட்டி எடுக்கப்பட்டதாக
காலத்தின் கோலம்.
நினைவுகள் எனும்
ஆகுதியில்
நித்தம் நீந்தித் 
தவிக்கும்
பாவப்பட்ட ஜீவனாய்
என் உள்ளம்.

-தோழி பிரஷா-

0 comments: