Tuesday, October 11, 2011

Share

உன் பிரிவால்...



என் வாழ்வின் அர்த்தங்களை 
உணர வைக்க 
உதயமான உறவொன்று 
திசைமாறும் வேளை
தடுமாறுகின்றேன் 
தனிமை எனும் கொடுமையில்..

இதயங்களின் சங்கமிப்பில்
அன்பினை பரிமாற்றி
பாசத்தில் பிண்ணி பிணைந்து
வாழ்க்கை எனும் கடலில் - என்
கண்கள் வளர்ந்திட்ட 
கனவுகள் இங்கே
காணல் நீராய் போனதடி 

உயிரே நீ என
உணர்வோடு வாழும் எனை
விதியே நீ என
தெருவோரம் வீசியதில்
துடி துடிக்குது என் இதயம்.
உணர்வினை ஊமையாக்கி
உறவுகளுக்காய் சிரித்து - என்
உள்ளம் வடிக்கும் கண்ணீர்
உதிரத்தில் சங்கமிப்பதால்
தினம் தினம் 
மரணித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பிரிவால்...

9 comments:

Unknown said...

நல்கவிதை

செய்தாலி said...

வரிகளில்
பிரிந்து உதிர்ந்த
ஒரு உறவின்
மனம்

அட்டகாசமான கவிதை

மாய உலகம் said...

பிரிவு எனும் வலியினை உணர்த்துக் கவிதை அருமை

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

ம.தி.சுதா said...

வலி மிகுந்த வரி

பிரணவன் said...

உள்ளம் வடிக்கும் கண்ணீர்
உதிரத்தில் சங்கமிப்பதால்
தினம் தினம்
மரணித்துக் கொண்டிருக்கிறேன். . .
அருமையான வரிகள். . .

mohamed mafaz said...

என் வாழ்வின் அர்த்தங்களை
உணர வைக்க
உதயமான உறவொன்று
திசைமாறும் வேளை
தடுமாறுகின்றேன்
தனிமை எனும் கொடுமையில்..
wow fantastic

Rathnavel Natarajan said...

உணர்வினை ஊமையாக்கி
உறவுகளுக்காய் சிரித்து - என்
உள்ளம் வடிக்கும் கண்ணீர்
உதிரத்தில் சங்கமிப்பதால்

அழகு வரிகள்.
அற்புதமான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

மகேந்திரன் said...

பிரிவின் துயரை துச்சமென மதிக்கும்
துச்சாதன வம்சத்தினரை
சாடும் வலிமிகுந்த வரிகள்.