Monday, July 12, 2010

Share

காத்திருக்கிறேன்....

வான்மதி தொட்டு வலம்வரும்
கற்பனையை வளர்த்து விட்டவனே..
உன் வருடலுக்காய் காத்திருக்கிறேன்.

விழிகளை மூடி உன்னை நினைக்கையில்
விந்தைகள் நிகழ்வது ஏன்?
மொழியினைத் தாண்டி மனம் உறவாட
மகிழ்வினில் மிதப்பது ஏன்?
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதன் நியாயமென்ன?
உன்னைக் கண்டு கவலைகள் கூற
சுமைகள் கலைந்திடும் மாயமென்ன?
என் வேதனை கண்டு காத்திடும் மௌனம்
விளங்கவில்லை அது ஏன்?

உன்னை நேசிக்கிறேன் என்பதைவிட
உன்னை சுவாசிக்கிறேன் என்பதுவே மெய்............

3 comments:

HamSon said...

//உன்னை நேசிக்கிறேன் என்பதைவிட
உன்னை சுவாசிக்கிறேன் என்பதுவே மெய்............//

கவிதை நல்லா இருக்கு. உங்கள் உணர்வுகள் பிரதி பலிக்கிறது

Ahamed irshad said...

Super Poetry...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே தொடர்ந்தும் வாருங்கள் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்