Sunday, July 11, 2010

Share

என் தாயே......


நினைவில் உன்முகம் மறந்தேன் - தாயே
கனவிலாவது வந்துவிடு!

மீண்டும்
ஒருமுறை மறுமுறை
வாழ்திட வேண்டும் - உன்
மடியில் எனக்கு மரணமும்
வேண்டும்.

கைகள் பிடித்து நடந்த
காலங்கள் மறந்தேன் - என்
கண்ணீர் துடைத்த கைகளையிழந்தேன்

எத்தனை பிறவிகள் எடுப்பினும்
அத்தனை பிறவியும் தாயாக வந்துவிடு...

அரை தசாப்பதம்
ஆகியும் கூட - நேற்று
வாழ்ந்தாற்போல்
இன்னும் நெஞ்சில் சில நினைவுகள்....

வீட்டு முற்றத்தில்
நிலாச் சோறு.......

பட்டு மடியில்
தாலாட்டு....

செல்லம் என்ற
சிறு அணைப்பு.....

சில சமயம் - நீ
அருகிலிருப்பதாய்
உணர்கிறேன் - என்
கண்கள் திறக்க மறுக்கின்றேன்

மற்றவர் இல்லை - தாயே!
பெற்றவள் உன் தூயன்புக்கு நிகர்.....

2 comments:

Unknown said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி நண்பரே...