Tuesday, July 6, 2010

Share

அழகிய ஓவியம்


எனக்குள் நீ விதைத்த
நம்பிக்கை ஓளிக்கீற்று
விண்ணளவு வளர்கின்றது...

வாழ்க்கை பற்றிய கனவுகள்
வானவில்லென கோலமிட்டு
மின்னலென பளிச்சிடுகின்றது...

நீ புதைத்த சோகங்கள்
எனக்குள் உறங்கி என்னில்
துளிர்த்த இன்பங்கள் உனக்குள்
துள்ளி விளையாடுகின்றது....

உன்னோடு கரைந்த நிமிடங்கள்
ஓவ்வொரு பூக்களென பூத்து
பூங்காவனமென பூத்துக்குலுங்குகின்றது
இன்பங்கள் வண்ணத்துப் பூச்சியென
சிறகடித்துப் பறக்கின்றது.....

உன்னோடு கலந்து விட்ட வாழ்க்கையிது
இன்பங்கள் பகிர்ந்து துன்பங்கள் துடைத்து
புன்னகைகள் பரிமாறிக் கொள்ளும்
அழகிய வாழ்க்கைப் பயணம்....

பாதகைகள் நீடிக்க
கண்கள் அகல விரிகின்றது
உன்னோடு நான் பயணிக்க இருக்கும்
வாழ்க்கைப் பயணம் தொடர்வதை
நினைத்து....!

இதயம் போடும் ஆனந்தக் கூச்சல்
கண்கள் போடும் சந்தோஷ கோலம்
வாய்கள் முணுமுணுக்கும் மெல்லிசை
அனைத்தும் உன் பெயரே...

என் நினைவுகள் - உன்
நினைவோடு கலக்க
என் நிஜங்கள் - உன்
நிஜங்களைத் தேடித்தேடி அலைகின்றது
என்றாவது என் கண்கள் உன்னைச்
சந்திக்கும் நேரம் அழகிய ஓவியமென
எம் நினைவுகளைப் பரிசளிக்க..........

3 comments:

பனித்துளி சங்கர் said...

கவிதையில் வார்த்தை தேர்ந்தெடுப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி நண்பரே...

இராஜேந்திரகுமார் said...

அழகு கவிதை