Thursday, July 1, 2010

Share

மௌனம்

மௌனம் கூட ஒரு மொழிதான்
அழகும் அர்த்தமும் நிறைந்ததுதான்
அதற்காக அதையே கட்டி கொண்டு வாழ வேண்டுமா ?

சோதனைகள் பல கடந்து விட்டேன்
சாதனைகள் ஏதும் படைக்கவில்லை
துன்பத்தையும் சமாளித்துவிடுகிறேன்
இன்பம் எதையும் காணவில்லை..

சோதனைகள் வாட்டும் போதும்
சோர்ந்து நான் விழும் போதும்
சோகங்கள் தீர்த்து வைக்கும்
சொற்கமான உன் மடி வேண்டும் தாயே!

4 comments:

Unknown said...

வார்த்தைகளால் கதை பேசுவதை விட
மௌனத்தால் மொழி பகிர்வது மிகவும் நல்லது
மௌனம் கூட சில சமயம் சிறந்த மொழி தான்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"மௌனம் கூட சில சமயம் சிறந்த மொழி தான்"
வருகைக்கு நன்றி.........

மதுரை சரவணன் said...

மெளனம் கவிதையில் பேசுகிறது. வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி நண்பரே...