Saturday, August 4, 2012

Share

என்றும் மரணிப்பதில்லை..



மெளனயாய் இருந்த
 என் அழைபேசி
நீண்ட காலத்தின் பின் 
சலசலக்க தொடங்கியது இன்று
தொலை தூரத்தில்
இருந்து ஓர் அழைப்பு,
அன்பாய் நலன் விசாரிப்பு
உரிமையாய் ஒரு அதட்டல்
கபடமில்லா நகைச்சுவைகள்
பேதமின்றிய நாட்டு நடப்பு விவாதம்
செல்லமாய் சிறு சண்டைகள்
வாழ்வின் எதிர்காலம்
கடந்த பசுமையான நினைவுகள்
கரைந்து போன கவலைகள்
தொடரும் இன்பங்கள் என
இன்றும் தொடர்ந்தது
நம் நட்பின்
இரு முனைகளிலும்.....

தேசங்கள் பல தாண்டி
உருவங்கள் மாறிச் சென்றாலும்
உயிர் பெற்ற
உண்மை நட்புக்கள்
என்றும் மரணிப்பதில்லை..

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

3 comments:

கவி அழகன் said...

Unkalukku nanapar thina valthukkal

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பர் தின சிறப்புக் கவிதை...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி…


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Avargal Unmaigal said...

வாழ்த்துக்கள்