நிச்சயமற்ற
இந்த உலகில்
தினம் தினம்
வந்து போகும்
ஆயிரம் உறவுகள்
கருவறையில்
களம் அமைந்து
வீரியம் மிக்க வித்தாக
அம்மாவுக்கு எனை சொந்தாக
புது உலகம் படைத்தவர் அப்பா.
ஈரைந்து மாதங்கள்
ஓர் உடலில்
ஈருயிராய் வாழ்ந்துreep
தொப்புள் கொடியறுந்து
தரை விழும் நேரம்
தலைமறைவானது
அப்பா எனும் உறவு
பாசம் எனும் பிணைப்பில்
அப்பாவின் அரவணைப்பு
அஸ்தமனமானதில்
அவதியுறும் உறவாய்
அம்மாவும் நானும்
அம்மாவின்
கண்களின் ஓரம் பூக்கும்
கண்ணீர் துளிகளின்
வலி சொல்லும்
தொலைவாகிப் போன
அப்பாவின் பிரிவு.
3 comments:
வரிகளில் வலி
என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோ
வரிகள் மனதை நெகிழ வைத்தது...
பிரிவன் வலி அருமையான கவிதை வரிகள் தோழி
Post a Comment