Sunday, August 19, 2012

Share

கன்னி பறவைகளாக...



பெட்டி நிறைய 
பணம் இருந்தும்
பெருமூச்சு விட்டு
காத்திருக்கிறாள் அக்கா..
அழகும் அறிவும்
இருந்தும்
கண்ணீரோடு
காத்திருக்கிறாள்
பக்கத்து வீட்டு தோழி..
'தோசம்' எனும்
மூடநம்பிக்கையும்
'சீதனம்' எனும்
சம்பிரதாயமும்
அழியும் வரை
வீட்டுச் சிறையில்
காத்திருக்கும்
கன்னி பறவைகளாக
பெண்கள்...

5 comments:

Yaathoramani.blogspot.com said...

மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதென்பதைப்போல்
கவிதை சிறிதெனினும் அது ஏற்படுத்திப்போகும்
தாக்கம் அதிகம் மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Prem S said...

முதிர் கன்னிகளின் நிலையை விளக்கிய விதம் நன்று

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

தீர்வு... - கல்வி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

கவி அழகன் said...

அழகிய கவிதை

Anonymous said...

ஹ்ம் கவிதை நன்று:)