Saturday, July 21, 2012

Share

நான் தான் தோல்வி....



நீ
இலட்சிய பாதையில்
பயணிக்கும் போது
என்னை சந்திக்காமல்
செல்ல முடியாது.

நீ
ஒவ்வொரு முறையும்
விழும் போதெல்லாம்
நான் தான் 
உன்னுடன் துணையிருந்தேன்.

நீ
சறுக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
வெற்றி உனதாக்க
உன்னை தயார்
படுத்திக் கொண்டிருந்தேன்.

உன் 
கழுத்தில்
வெற்றி மாலை 
விழும் போது
நான் பிணவறையில் இருப்பேன்.


நான் தான் தோல்வி....


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் ... அருமையாக முடித்துள்ளீர்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா அருமை......தன்னம்பிக்கை கவிதை....!