Tuesday, July 19, 2011

Share

புரிதலின்றி...

 மனம் சோரும் மறு நொடியே
என் மனதறிந்து நடந்திட 

வேண்டுமடா நீ-என
கூறிட வேண்டி மனம் 

கற்பனை வளர்த்திடும்
மறுநொடி தடுத்திடும் அதே மனம்
பாசத்தை அளந்திடு
புரிதல் எனும் கருவி கொண்டு...!

மன்றியிடும் என் கண்கள்
உன் கண்களுக்கு தெரியலயா?
மரணத்தை தேடும் என் மனதை
உன் மனதால்  புரிந்திடத்தான் முடியலையா?
உனக்கு புரிதல் தான் இல்லையா?

காதலுக்கு தேவை புரிதலென்றாய் அன்று
ஆனால்...
காதலே புரிதலின்றி போனது இன்று..
!

12 comments:

Prabu Krishna said...

ஊடல்....???

ரேவா said...

மனம் சோரும் மறு நொடியே
என் மனதறிந்து நடந்திட வேண்டுமடா நீ-என கூறிட வேண்டி மனம் கற்பனை வளர்த்திடும் மறுநொடி தடுத்திடும்
அதே மனம்...

இந்த வரியே போதும், பெண் கொண்ட அன்பை புரிந்திட...அழகான கவிதை பிரஷா

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதை பிரஷா.

சக்தி கல்வி மையம் said...

அற்ப்புதமான வரிகள் தோழி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புரிலைப்பற்றி அழகிய கவிதை...

arasan said...

நல்ல வரிகளில் நல்லதொரு கவி மழை ..

பிரணவன் said...

புரிதலில் தான் காதல். . .உணர்தலில் தான் காதல். . .ஏக்கம் அருமை. . .

Unknown said...

Nice! :-)

மாய உலகம் said...

காதலே புரிதலின்றி போனது இன்று.. !

காதலே... உறவுகள் என்பது பொய் என்றால் சிறகுகள் தந்து முறிப்பது ஏன்?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேரம் போதாமையால் தனித்தனியான பதில் தரமுடியவில்லை மன்னிக்கனும் உறவுகளே...
வருகைதந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்..

Learn said...

இனிமையோ இனிமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Praveenkumar said...

மிகவும் அருமையான நெகிழவைக்கும் கவிதை வரிகள். சூப்பர்.