Thursday, July 7, 2011

Share

மாற்றம்...



பரந்து பட்ட உலகில்
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப
மாற்றம்மின்றி சிக்கி தவிக்கிறது மாற்றம்.

பத்து மாதம் சுமத்து
பாசத்துடன் பாலூட்டி
பாசம் காட்டும்
அன்னைக்கும் சேய்கும்
இடையில் ஏற்படும்
வயதில் மாற்றம்...

சுமையை இனிமையாய் சுமத்து
குடும்பம் தழைத்திட
அல்லும் பகலும் உழைத்து
சேய் வாழ தான் சிரிக்கும்
தந்தைக்கும் பிள்ளைக்கும்
இடையில் ஏற்படும்
தனிமையில் மாற்றம்...

ஓர் கொடியில் பூத்து
பாச மலர்களாக
ஓர் தட்டில் உணவருத்தி
ஓர் கூட்டில் வாழும்
சகோதரங்களுக்கு
இடையில் ஏற்படும்
பிரிவில் மாற்றம்....

ஓடியாடி விளையாடி
அறிவு என்னும்
சுவையை பகிர்ந்து
வாழ்வின் சிகரத்தை அடைய
பாடசாலை தரும்
கல்வியில் மாற்றம்....

வாழ்க்கை என்னும் கடலில்
நீச்சல் எனும் ஊடலில் இணைய
கணவன் எனும் துடுப்பை
கை பிடிக்கும் தருணத்தில்
பெண்ணின் பிறப்பில் மாற்றம்..

மாற்றங்களோ
இன்றும் மாற்றமின்றி
மாறிக் கொண்டே இருக்கின்றது...

24 comments:

இராஜராஜேஸ்வரி said...

மாற்றங்களோ
இன்றும் மாற்றமின்றி
மாறிக் கொண்டே இருக்கின்றது...//

அருமை.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

மாற்றம் ஒன்றே இந்த உலகில்
மாறாதது..

மாற்றம் தந்த தோழிக்கு
மாலை வணக்கங்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Mahan.Thamesh said...

Nice poem

Unknown said...

//பரந்து பட்ட உலகில்
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப
மாற்றம்மின்றி சிக்கி தவிக்கிறது மாற்றம்//
NICE! :-)

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

இதுவும் மாறும்வாழ்க வளமுடன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted 4 to 5 in Indli

நல்லதொரு கவிதை. வெவ்வேறு மாற்றங்களைப் பற்றிச் சொல்லி, அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது..

ஒரு கவிதை படிங்க ...!

கூடல் பாலா said...

அழகிய கவிதை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மாற்றங்கள் இன்றி உலகம் ஏது..

அழகிய கவிதை

சுஜா கவிதைகள் said...

மாற்றம் இன்றி வாழ்வில் இனிமை இல்லை தோழி ........

கவி அழகன் said...

மாற்றி மாற்றி மாற்றத்தை சொல்லி மாற்றிவிட்டீர்கள் படிப்பவர்களை

Prabu Krishna said...

//ஓடியாடி விளையாடி
அறிவு என்னும்
சுவையை பகிர்ந்து
வாழ்வின் சிகரத்தை அடைய
பாடசாலை தரும்
கல்வியில் மாற்றம்....//

இன்றைய பள்ளி நிலை.....
அருமை தோழி.

S Maharajan said...

மாற்றங்களோ
இன்றும் மாற்றமின்றி
மாறிக் கொண்டே இருக்கின்றது...

அருமை தோழி.

Anonymous said...

எங்கும் எதிலும் மாற்றம் ஒன்றே நிரந்தரம் ...நல்லாய் இருக்கு வரிகள்

Niroo said...

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது

பிரணவன் said...

வாழ்க்கை என்னும் கடலில்
நீச்சல் எனும் ஊடலில் இணைய
கணவன் எனும் துடுப்பை
கை பிடிக்கும் தருணத்தில்
பெண்ணின் பிறப்பில் மாற்றம்...அருமையான வரிகள். . .

Avargal Unmaigal said...

மாற்றங்களோ
இன்றும் மாற்றமின்றி
மாறிக் கொண்டே இருக்கின்றது

மிகவும் நன்றாக இருக்கிறது இந்த மாற்றம்,

A.M.Askar said...

மாற்றம்..காலம் செய்யும் கோலங்களை படம்பிடித்துக்காட்டுகிறது...வாழ்த்துக்கள்...

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான கவிதை வாழ்த்துகள் தோழி

Anonymous said...

அருமை..அருமையான வரிகள்...அருமை தோழி...
வாழ்த்துகள்.

vidivelli said...

வாழ்க்கை என்னும் கடலில்
நீச்சல் எனும் ஊடலில் இணைய
கணவன் எனும் துடுப்பை
கை பிடிக்கும் தருணத்தில்
பெண்ணின் பிறப்பில் மாற்றம்..

மாற்றங்களோ
இன்றும் மாற்றமின்றி
மாறிக் கொண்டே இருக்கின்றது...



அழகாய் உண்மையை சொன்னீங்க,,,,,
சுப்பர் கவிதை....
வாழ்த்துக்கள்..

kowsy said...

உடலில் மாற்றம், உள்ளத்தில் மாற்றம், வாழ்வில் மாற்றம், பூலோகத்தில் மாற்றம், எதிலும் மாற்றம், எல்லையில்லை மாற்றத்தில். மாற்றம் பற்றிக் கவிதை வடித்த எண்ணத்திற்கு வாழ்த்துகள்

மாய உலகம் said...

மாற்றம் ஏமாற்றத்தை தரவில்லை...அருமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நேரம் போதாமையால் தனித்தனியான பதில் தரமுடியவில்லை மன்னிக்கனும் உறவுகளே...
வருகைதந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்..