Saturday, October 23, 2010

Share

உன் பிரிவால்..

 என் நெஞ்சே நீ எங்கே
உன்னைக் காணாமல்
என் இதயம் அழுகிறது.
கண்கள் கண்ணீரை தினம்
இங்கு வடிக்கிறது.
வீசி வரும் காற்றை பிடித்து - உன்
முகவரி கேட்டேன் கிடைக்வில்லை
வெண்ணிலவை அருகில் அழைத்து
உன் முகம் தேடினேன் தெரியவில்லை
உன் குரலென்று நான் ஓடி வந்தேன்
அது குயிலென்று தெரிந்தும் வாடி நின்றேன்
அன்பே என் அமுதே நீ எங்கே
கண்னே என் நெஞ்சே நான் இங்கே
நிஐம் உன் நினைவால் நிழலாகின்றது
நிழல் உன் நினைவால் நிஐமாகிறது
பாவையே என் போதையே
ஏன் நீ என்னை விட்டுப் பிரிந்தாய்
அதனால் நான் இன்று கல்லறையில்....

10 comments:

தினேஷ்குமார் said...

வெண்ணிலவில்
முகம் தேடி
வீசும் காற்றில்
முகவரி கேட்டு
தன்னிலை
மறந்தே இன்றும்
தனிமையில்
நான்.........

கோச்சுக்காதிங்க தோழி சும்மா ரெண்டு வரி எழுதலாம்னு தோன்றியது எழுதிவிட்டேன்

கவிதை அருமை

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு.. அக்கா..

எஸ்.கே said...

//உன் குரலென்று நான் ஓடி வந்தேன்
அது குயிலென்று தெரிந்தும் வாடி நின்றேன்//
அழகான வரிகள்!
மென்மேலும் மெருகேறிக்கொண்டே வருகின்றது உங்கள் எழுத்துக்கள்!

thiyaa said...

கவிதை அருமைங்க
முதல் தடவையாக உங்கள் தளத்துக்கு வந்திருக்கிறேன்
"ரோஸ்" களால் அலங்கரிக்கப்பட்ட உங்களின் வலைத்தளம் அழகோ அழகு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dineshkumar said...
வெண்ணிலவில்
முகம் தேடி
வீசும் காற்றில்
முகவரி கேட்டு
தன்னிலை
மறந்தே இன்றும்
தனிமையில்
நான்.........

கோச்சுக்காதிங்க தோழி சும்மா ரெண்டு வரி எழுதலாம்னு தோன்றியது எழுதிவிட்டேன்

கவிதை அருமை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கு.. அக்கா..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி தம்பி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...

//உன் குரலென்று நான் ஓடி வந்தேன்
அது குயிலென்று தெரிந்தும் வாடி நின்றேன்//
அழகான வரிகள்!
மென்மேலும் மெருகேறிக்கொண்டே வருகின்றது உங்கள் எழுத்துக்கள்!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி நண்பா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தியாவின் பேனா said...

கவிதை அருமைங்க
முதல் தடவையாக உங்கள் தளத்துக்கு வந்திருக்கிறேன்
"ரோஸ்" களால் அலங்கரிக்கப்பட்ட உங்களின் வலைத்தளம் அழகோ அழகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நன்றி புதிய நண்பா

கவி அழகன் said...

நல்ல இருக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வந்துள்ளீரகள் நன்றி ...........