Sunday, October 10, 2010

Share

என்னை ஈன்றவளே.....

 அம்மா என்னை ஈன்றவளே
கவிதைகளில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்
காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்.

பாஷைகளின் அழியாத மொழியாக
அன்பு என்னும் வார்த்தையில்
அர்ச்சனை மந்திரமாக
அறிவையூட்டும் ஆசானாக
இருந்திருக்க வேண்டிவளே
என்னை தவிக்க விட்டு சென்றதேனம்மா?

நீ இல்லாத இவ்வலகில்
நான் படும் அவஸ்தைகள்
அறியாயோ?
பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக
பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன்
என்நிலை அறிந்து ஆறுதல்
சொல்ல யாருமில்லை எனக்கு..

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்...

என்னால் நடிக்க கூட முடியவில்லை
என்னை அரவணைத்து கொள் உன்னுடன்
சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக
வாழ்வோம் நிரந்தரமாக......

29 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான வரிகள் ..

Unknown said...

அம்மாவை விட வேறு ஒன்றுமில்லை

மனோ சாமிநாதன் said...

“காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்”.

அருமையான வரிகள்! சோகமான-ஆனால் அழகான கவிதை!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதிய மனிதா.. said...
அருமையான வரிகள் ..

நன்றி நண்பாஃஃஃஃஃஃஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

England said...
அம்மாவை விட வேறு ஒன்றுமில்லை

அம்மா கடவுளுக்கும் மேலானவள்....... நன்றி நண்பா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

“காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்”.

அருமையான வரிகள்! சோகமான-ஆனால் அழகான கவிதை!

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி....

கவி அழகன் said...

தனிதமிழ் வளத்தமிழ் கவிதை
வாசிக்க வாசிக்க அருமை

Unknown said...

இந்த உலகில் மிகவும் உயர்வான விசயம் அம்மா மட்டும்தான் ,,,
உணர்வுப்பூர்வமான கவிதைக்கு என் பாராட்டுக்கள் ..

Unknown said...

நல்லாயிருக்கு..

எஸ்.கே said...

தாய்மை உணர்த்தும் கவிதை! அருமை! மிக அருமை!

சி.பி.செந்தில்குமார் said...

அம்மாவைப்பற்றிய கவிதை அனைவருக்கும் பிடிக்கும்.என்னைக்கவர்ந்த வரிகள் >>>

சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக...

வெல்டன்

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு இடத்தில் கூட எழுத்துப்பிழையே இல்லை,உங்கள் எடிட்டிங்க் அருமையான முன்னேற்றம்

rvelkannan said...

ரொம்பவே நல்லா இருக்கு பிரஷா தொடருங்கள் ...

Unknown said...

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்

Unmayana varikal

mohamed mafaz said...

நீங்கள் எழுதிய இந்த வரிகளில் நான் எனது தந்தையை நினைவு கூர்ந்து கொள்கிறேன்.
மிக அருமை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யாதவன் said...
தனிதமிழ் வளத்தமிழ் கவிதை
வாசிக்க வாசிக்க அருமை

@நன்றி நண்பரே.......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கே.ஆர்.பி.செந்தில் said...
இந்த உலகில் மிகவும் உயர்வான விசயம் அம்மா மட்டும்தான் ,,,உணர்வுப்பூர்வமான கவிதைக்கு என் பாராட்டுக்கள் ..

ஃஃஃநன்றி நண்பரே...ஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பதிவுலகில் பாபு said...
நல்லாயிருக்கு..

ஃஃஃநன்றி நண்பரே...ஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
தாய்மை உணர்த்தும் கவிதை! அருமை! மிக அருமை!

ஃஃஃநன்றி நண்பரே...ஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சி.பி.செந்தில்குமார் said...

அம்மாவைப்பற்றிய கவிதை அனைவருக்கும் பிடிக்கும்.என்னைக்கவர்ந்த வரிகள் >>>

சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக...

வெல்டன்

ஒரு இடத்தில் கூட எழுத்துப்பிழையே இல்லை,உங்கள் எடிட்டிங்க் அருமையான முன்னேற்றம்

ஃஃஃஃபாராட்டுக்கு நன்றி நண்பரேஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Vel Kannan said...
ரொம்பவே நல்லா இருக்கு பிரஷா தொடருங்கள் ...

ஃநன்றி நண்பரேஃஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்

Unmayana varikal

ஃநன்றி நண்பிஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

mohamed mafaz said...

நீங்கள் எழுதிய இந்த வரிகளில் நான் எனது தந்தையை நினைவு கூர்ந்து கொள்கிறேன்.
மிக அருமை.


ஃஃஃநன்றி mohamed mafazஃஃஃஃ

நிலாமதி said...

அழகான் எழுத்து நடை நெஞ்சை தொடும் வரிகள். எல்லையிலாத்வல் அம்மா.........பாராட்டுக்கள்.

நிலாமதி said...

வணக்கம் பிரஸா..........(word verification ) ஐ நீக்கி விடுங்களேன் பதிவிட கஷ்டம் அது இன்னொரு பதிவு போல.பிளீஸ்........ யாரும் சொல்லவில்லையா?பதிவு போடும்போது ஆங்கில் எழுத்துக்களை கேட்கிறது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வணக்கம் நண்பி... word verification நீக்கி விட்டேன்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

(அழகான் எழுத்து நடை நெஞ்சை தொடும் வரிகள். எல்லையிலாத்வல் அம்மா.........பாராட்டுக்கள். )
...ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ.....
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பி..

prabhadamu said...

அருமையான வரிகள் :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பா.......