பட்சியே!!!
உன்னை காணும் வரையில்
என்னை தீண்டியதில்லை
காதல்...
நீ ஜோடியாய்
ஒய்யாரமாய் மரத்தடியில்
காதல் மொழி பேசுகையில்
கனக்கிறது என் மனம்
காதலை எண்ணி...
பட்சியே!!
உனக்களித்த சிறகுகளை
எனக்கும் அளித்திருந்தால்
பகமை இல்லாத
இடம் தேடி
பறந்தே போய் இருப்பேன்
காதல் கிளி அவளுடன்...
அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து
தினம் தினம்
எண்ணங்களை கவியாக்கி
காதல் ராகம் பாடுகிறேன்
அவள் நினைவால்...
பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..
நித்தம் நித்தம்
பித்து பிடிக்க வைக்கும்
அவள் நினைவுகள்
செத்தும் பிழைக்கிறேன்
காதல் புரியும்
தர்ம கொலைகளில் இருந்து..
15 comments:
அருமை அருமை
ஜோடிக் கிளிகள் காதல் ரணங்களை
கிளறிவிட்டுப் போனாலும்
அதில் கிடைத்த கவிதை அற்புதம்
காதல் என்பதே துயரும் சுகமும் கலந்த கலவைதானே
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லாஇருக்கு கவிதை வாழ்த்துக்கள்.
அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து
தினம் தினம்
எண்ணகளை கவியாக்கி/
சொக்கிப்போக வைக்கும் வரிகள்.
பாராட்டுக்கள்..
கவிதை அருமமை
காதல் மொழிபேசும்
இனிய கவிதை....
கவிதை சுமார்தான் .அடுத்த முறை இதை விட சிறந்ததாக எதிர்பார்க்கிறேன். நன்றி.
பாடலாய் பாடிப்பார்த்தேன்...சுகமாய் இருந்தது...
@Ramaniநன்றி ரமணி ஜயா
@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா
@இராஜராஜேஸ்வரி நன்றி சகோதரி
@கவி அழகன்நன்றி கவிழகன்
@மகேந்திரன் நன்றி சகோதரா
@sivalingamtamilsourceவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@ரெவெரிநன்றி ரெவெரி
பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..
ரணம் இந்த வார்த்தையை படிக்கும் பொழுதே இதயத்தில் ஒரு வலியை உணர முடிகிறது. கவிதையில் எல்லா வரிகளும் படிப்பவர்களின் மனதை ஆக்கிரமிப்பதில்லை. சில வரிகளே முழு கவிதையின் பாதிப்பைத் தந்துவிடுகிறது. அப்படி என்னைப் பாதித்த வரிகள்.
அருமை.
Post a Comment