Saturday, January 29, 2011

Share

குருதி தோய்ந்த எம் இனம்

 பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.

சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...

அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?

பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..

கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...


51 comments:

Unknown said...

//பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..//
மிக அருமை!

ம.தி.சுதா said...

/////அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது////

அருமை.... அக்கா..

சிந்திக்க வேண்டிய தருணம்
போனதால் நிந்திக்கப்படுகிறோம்...

ம.தி.சுதா said...

ஏன் நீங்கள் தமிழ்மணத்தை இன்னும் சேர்க்கல... வருகையாளர் கூட வரும் இடத்தில் அதுவும் ஒன்றல்லவா..

வைகை said...

கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...///////////

கோடாரிக்காம்புகள் குலத்திலே முளைத்திட்டால், தமிழன் என்ன? எந்த இனத்திற்கும் இதுதான் கதி!

எஸ்.கே said...

உணர்வுப் போராட்டம் மிக்க கவிதை! நன்று!

Ram said...

எழுச்சி மிகுந்திருக்கிறது..

karthikkumar said...

ஒன்றுபட்டு போராடுவோம் ..

'பரிவை' சே.குமார் said...

உணர்ச்சிகள் நிறைந்த போராட்டக் கவிதை.

முனியாண்டி பெ. said...

கஷ்ட்டமாக இருக்கிறது படிக்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...//

அருமையாக இருக்கிறது இந்த வரிகள்! ஆனாலும் நாம் நம்பிக்கையைக் கைவிட வேண்டாம்! நல்லதே நடக்கும் என்று நம்புவோம்!

ரேவா said...

அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது....

ஒன்றுபட்டு போராடுவோம் ..

ஹேமா said...

எங்களுக்கென்று நாங்கள் பாதுகாத்த பண்பாடு கலாசாரம் எல்லாம் அழிகிற அநியாயத்தை கலாசார சீர்கேட்டை வரிக்கு வரி வெளிப்படுத்தி மனதைக் கலங்க வைத்திருக்கிறீர்கள் பிரஷா !

Unknown said...

நல்கவிதை

கவி அழகன் said...

மூச்சு இழுக்க மூக்கிருந்தும்
காற்று வாங்க உரிமை இழந்த
இனத்தில் பிறந்தவன்

நிரூபன் said...

அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன//

எங்கள் எல்லோர் உச்சியின் மீதும் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு கவிதையில் தெரிகிறது. காலங் கடந்த ஞானம் என்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டோம்.

சக்தி கல்வி மையம் said...

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்று..

arasan said...

வலிகளை அப்படியே பதிவு செஞ்சிருக்கிங்க ....

இந்நிலை நிச்சயம் மாறும் சகோ ....

Yaathoramani.blogspot.com said...

எழுத வேண்டியதை எழுதவேண்டிய நேரத்தில்
மிகச் சரியாக எழுதியிருக்கிறீர்கள்
புரிந்து கொள்ள வேண்டியவர்கள்
புரிந்து கொண்டால் சரி வாழ்த்துக்கள்

Unknown said...

அருமையான பகிர்வு

முடிவு கிடைக்கும் வரை போராடுவோம்

ஜெய்லானி said...

இப்போது எழும் டிவீட்டர் அலை அப்போதே எழுந்திருந்தால் ஒரு வேளை விழித்திருக்கும் ..

S Maharajan said...

உணர்வுப் போராட்டம் மிக்க கவிதை!

Prabu Krishna said...

இணைய தமிழர்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெரும்.
நல்ல கவிதை தோழி!!!

Philosophy Prabhakaran said...

உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி மேடம்...

VELU.G said...

எழுச்சி மிகுந்த சிந்திக்க வைக்கும் கவிதை

Srini said...

அருமை...அருமையிலும் அருமை...!!
உணர்ச்சிவசப்படவைக்கும் வரிகள்....
ஒரு வேண்டுகோள் :
உங்க BLOG'ன் வடிவமைப்பு கண்ணுக்கு ரொம்ப அயற்சிய ஏற்படுத்துதுங்க.. படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. எளிமையா மாத்துனா நல்லா இருக்கும்.

logu.. said...

\\பகல் கனவை நிஐமாய் கொண்டு\\

Sathiyama oru nalaiku nijamagum..
pagal kanavunu sollatheenga.

Unknown said...

போராட்டத்தின் முடிவாய் வரும் வலியை கவிதையின் அனைத்து வரிகளும் காட்டுகிறது..
வலியான கவிதை..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... மிக்க நன்றி ஜீ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா நன்றி சுதா.. தமிழ்மணத்தில் இணைப்பு கொடுக்கின்றனான்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@வைகை உண்மைதான் வைகை... நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@எஸ்.கே நன்றி சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@தம்பி கூர்மதியன் நன்றி தம்பி கூர்மதியன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar நன்றி கார்த்தீக்குமார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@முனியாண்டி வருகைக்கு நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மாத்தி யோசி நம்பிக்கைதான் வாழ்க்கை.. நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரேவா ஓன்றுபடுவோம்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கலாநேசன் நன்றி கலாநேசன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன் வருகைக்கு நன்றி யாதவன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நிரூபன் காலங்கடத்திடினும் ஒன்றுபடுதல் தானே வெற்றி.. நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre-கருன் நன்றி குருன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அரசன் மாறும் என்ற நம்பிக்கையுண்டு அரசன்.. நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramani நன்றி ஜயா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெய்லானி உண்மைதான்...நன்றி சகோதரி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@விக்கி உலகம் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@S Maharajan நன்றி மகாராஜன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaran இது உணர்வுள்ள ஒவ்வொருவர் கடமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@VELU.G நன்றி வேலு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Srini நன்றி உங்கள் கருத்தை ஏற்கின்றேன் மாற்றங்கள் செய்வது பற்றி யோசிக்கின்றேன்... நன்றிகள்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நிஜமாகனும் லோகு நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... நன்றி பாரத்..பாரதி..