Sunday, August 22, 2010

Share

அன்னையே....

 அன்பை ஊட்டிய அன்னையே - என்
ஆசைகளையும் தீரத்தயம்மா...
இனிய வாழ்வை தந்தாயே- இறைவன்
ஈசன் அவன் அருளாளே.....

உண்மை பேச கற்றுதந்தாய் - என்னை
ஊரறிய வாழ வைத்தாய்
என் உயிர் தாயே - எனக்கு
ஏழ்மையிலும் கல்வி அறிவை ஊட்டினாய்

ஜயமில்லாத வாழ்வு என்னவென்று- அரவணைத்து
அன்புடனே கற்று தந்தாய்
ஒவ்வொரு இரவும் நான் தூங்க
தாலாட்டு நீ படித்தாய்
ஓங்கி அழும் என் குரல் கேட்டு
ஓடி வந்து தூக்கி அணைப்பாய்
ஒளவை பாட்டி கதை சொல்லி
ஆகாரம் ஊட்டி வளர்த்தாய்
அன்னையே உன் அன்புக்கு
ஏங்குகிறேன் இன்று ...

2 comments:

Unknown said...

கவிதை நல்லாயிருக்கு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே.....