Saturday, August 14, 2010

Share

எனதான்மா...!

 தனிமையில்
கிடந்தே
தவித்தழும்
என் இதயத்துக் குமுறல்களை
எழுதிடவும் முடியவில்லை....

சோகம் சுமந்த
வாழ்வுக்கு
வசந்த காலம்
உண்டென்ற வார்த்தைகளும்
என் வாழ்வில்
பொய்யாகிப் போகிறது!

இதயத்து
ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்தைக்காகத்
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றது
சாபங்கள்.....

வலி சுமந்தே
வாழப் பழகியதால்
அதுவே வழமையாகிப் போய்
வாழ்வே வேம்பாகிப் போனது!

வராத
வசந்தங்களும்
தொலைவான நேசங்களும்
எண்ணிலையறியாததால்
நான் வாழ்வதிலும்
அர்த்தமில்லையென
அடிக்கடி
அங்கலாய்த்துக்
கொள்கின்றது
எனதான்மா...!

0 comments: