Friday, August 20, 2010

Share

உன் வருகையால்...

 அன்பே
இருமனங்கள் இணைந்திட்ட
எம் உறவுப் பயணத்தின்
தடைகல்லாய் தலைகாட்டும்
முள்வேலிகள் விரைவில்
விலகும்.. 
அப்போது
தென்றலாய் உனைத்
தழுவி மகிழ்ந்திடுவேன்
அதுவரை உன் மௌன
வாசிப்புகளில் - என்
உயிர் துடிப்பின் ராகங்களை
செவிமடுத்துக் கொள்
அடிக்கடி நீ என் கனவில்
வந்து போக மறந்துவிடாதே
நீ வருவதால் தான்
முள்வேலி கூட ஒரு
ரோஜாக் கூட்டமாய்த்
தெரிகின்றது.

3 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீ வருவதால் தான்
முள்வேலி கூட ஒரு
ரோஜாக் கூட்டமாய்த்
தெரிகின்றது. //

கண்ணுல ஏதாவது பிரச்சனையா இருக்க போகுது.. சீக்கிரம் டாக்டரை பாருங்க...

சும்மா தமாசுக்கு... கவிதை நல்லாயிருக்குங்க...

சசிகுமார் said...

அருமை நண்பா நல்ல கவிதைகள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே