Tuesday, August 10, 2010

Share

சொல்லிவிட்டுப் போ அன்பே...

 காதலாக வந்த கவிதை
காற்றாய் கலந்தது..

என் உயிரோடு இருக்கும்
ஓசை உன் பெயரை
இசையமைக்கின்றது....

அன்பே நீ என் காதலனாக வரும்
ஆசையதுவே என் சுவாசமாய்
மாறியது...

என் இதயத்திற்கு சொல்
என்னுயிர் உன்னோடு தான்
இருக்கிறதென்று...

காத்திருந்த காதல் கனவாகி விடுமா?
நினைத்துப் பார்க்கின்ற நினைவுகள்
சுகமாகி விடுமா?

இதுவரை எனக்கும் உனக்கும்
சொல்லாத அந்த மெளன உணர்வுகளை
இப்பொழுதாவது சொல்லிவிட்டுப் போ....!

3 comments:

தேவன் மாயம் said...

அழகாகச் சொல்லிவிட்டீர்கள்!!

தேவன் மாயம் said...

Your blog looks very nice!!I wonder how you made this?

Maduraimohan said...

பேசாமல் இருப்பது தான் மௌனத்தின் அழகு :)