Wednesday, August 4, 2010

Share

காதலனே

 அதெப்படி? இரவில் என்னை
உறங்கிப்போக செய்யும்
உன் நினைவுகளே
காலையில் என்னை
எழுப்பி விடவும்
செய்கின்றன...

உலகில் மற்றவர்கள்
எல்லாம் எனக்கு உறவு
நீ மட்டுமே உயிர்...

உலகத்தில் ஒரு முறை
மட்டுமே நிகழ்ந்து விட்ட
அதிசயம் உன் பிறப்பு...

பூமிக்கு நிலாவிடமிருந்து தான்
ஒளி கிடைக்கிறது....!

எனக்கு மட்டும்
உன்னிடமிருந்து தான்
கிடைக்கிறது...?

உன்னை கை பிடிக்க
வேண்டும் என்ற ஆசை
எல்லாம் எனக்கு
அறவே இல்லை...
நீ சுவாசித்த
காற்றை பிடிக்க வேண்டும்
என்றஆசை மட்டுமே!

8 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

kavithai super..

பாற்கடல் சக்தி said...

////அதெப்படி? இரவில் என்னை
உறங்கிப்போக செய்யும்
உன் நினைவுகளே
காலையில் என்னை
எழுப்பி விடவும்
செய்கின்றன...///
ஆழத்திலிருந்து வரிகள்....

அதென்ன "ரோ'ஜாக்களுக்குப் பதில் "றோ'ஜாக்கள்

Anonymous said...

கவிதை நன்றாக உள்ளது....

தொடர்ந்து இது போன்ற கவிதைகளை எழுதுங்கள்....

வாழ்த்துக்கள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே. உங்கள் பின்னூட்டம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றது.

ம.தி.சுதா said...

அருமையான கவிதை. இன்னும்....இன்னும்....இன்னும்....எதிர் பார்க்கிறேன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி சுதா, இன்னும் வரும்

புல்லாங்குழல் said...

நேசிப்பவனையே சுவாசிக்க துடிக்கும் உங்கள் உணர்வுகள் புனிதமானது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே.....