Sunday, April 25, 2010

Share

அம்மா......

அம்மா என்ற பாசையின்
அழியாத செல்வம்
அதரத்தில் உச்சரிக்கும்
அமிர்த வார்த்தை
அன்பு என்ற ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம்
அறிவை ஊட்டும்
அகராதி ஊற்று
அன்னை மடியில்
அலைவீசும் நேசம்
அகத்தின் மென்மையில்
அரவணை அச்சகம்
அல்லல் தீண்டினும்
அனுசரிக்கும் ஆத்மா
அகிலம் போற்றும்
அதிசய அவதாரம். 



உடுவையூர் த.தர்ஷன்
பிரான்ஸ்.

0 comments: