Sunday, April 29, 2012

Share

புரிந்து கொண்டேன்


இறந்த போன
உணர்வுகளுக்கும்
நாடி நரப்புகளில் புகுந்து
புத்துயிர் அளிக்கும்
அதிசயத்தை 
உணர்ந்து கொண்டேன்
அவள் சொரியும்
ஒட்சிசனான பாசத் துளிகளில்..

இடி விழுந்த சோகம்
வாழ்க்கை விழுக்கும்
தருணங்களிலும்
தலை நிமிரும் சூட்சுமம்
அறிந்து கொண்டேன்
அச்சுணனின் வில்லாய்
அவளின் துணிவில்..

பூக்களுக்குள்ளும்
பூகம்பம் உண்டு என்று
புரிந்து கொண்டேன் - அவளின்
வார்த்தைகளின் பிரளயத்தில்..

3 comments:

செய்தாலி said...

//பூக்களுக்குள்ளும்
பூகம்பம் உண்டு என்று
புரிந்து கொண்டேன் - அவனி(ளி)ன்
வார்த்தைகளின் பிரளயத்தில்..//

ம்ம்ம்ம் உண்மையில் உண்டு தோழி

நீண்ட நாட்களுக்க்பிறகு உங்கள் கவிதை வாசிக்கிறேன்
நீங்கள் நலமா தோழி

இராஜராஜேஸ்வரி said...

பூக்களுக்குள்ளும்
பூகம்பம் உண்டு என்று
புரிந்து கொண்டேன் - அவளின்
வார்த்தைகளின் பிரளயத்தில்..

ரச்னையான வரிகள்.. பாராட்டுக்கள்..

சிவரதி said...

வார்த்தைகளின் பிரளயத்தோடு
வடிந்த விழிநீரினையும்-இணைத்து
வழிந்தோடும் சோகத்துக்கு
வரிகொடுத்த விதம் அழகு.....