Saturday, December 31, 2011

Share

புதிய ஆண்டில்....



சோதனை பல சபித்து - அதில்
மனிதனை வேதனையில்
விழ வைத்து
வெற்றி பயணத்தினை முடிந்து
விடைபெற தயாராகி விட்டது
2011.....

ஓராயிராம் ஆசைகளும் ஏக்கங்களும்
நம்முள்ள....

யுத்தம் என்னும் 
வேள்விக்குள் தீக் குளித்து
கேள்விக் குறியோடு
அலைந்து திரியும்
எம் தேசத்து உறவுகளுக்கு
விடை கிடைத்திட...

இயற்கையின் சீற்றதில்
சின்னாபின்னமாகி போன
பல ஆயிரம் உயிர்களை
எனியும் இழக்காமல் இருக்க
இயற்கையின் சமநிலையை காத்திட...

தோல்வியே வாழ்வாக
துவண்டு போன உள்ளங்களுக்கு
சூரிய உதயமாய்
வெற்றிகள் மட்டும் கிடைத்திட....

கண்ணீரில் கரைந்து
பாசைகளை மெளனமாக்கி
சோர்ந்து போனவர்களின் உள்ளங்களுக்கு
புன்னகை மட்டும் வரமாய் கிடைத்திட...

லட்சியம் ஏதுமின்றி
கட்டாகலி மாடுகளாய்
அலைந்து திரியும் 
இளைஞர் கூட்டத்தில் 
தன்னப்பிக்கை என்னும்
அட்சயபாத்திரம் ஊற்றெடுத்திட...

எண்ணற்ற கற்பனையில்
ஏங்கி அலையும் 
மனித மனங்களின்
ஆசைகளை பூர்த்தி செய்திட...

பிறக்க போகும் 2012
வரமாய் அமைய
வாழ்த்துகின்றேன்....

8 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

ரொம்ப நாள் ஆகிவிட்டது

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..!

MANO நாஞ்சில் மனோ said...

மிக்க நன்றி, உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

குறையொன்றுமில்லை. said...

பிறக்க போகும் 2012
வரமாய் அமைய
வாழ்த்துகின்றேன்....


இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

நல்ல கவிதை.

இனிய பபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

Wishing You And Your Family Good Health & Prosperity In The NEW YEAR

ஜெய்லானி said...

உங்களுக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். :-)

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
வாழ்த்துக்கள்...