Wednesday, November 30, 2011

Share

உன் காதலால்...

 உள்ளங்கள் இரண்டிங்கு - தம்
உணர்வினை பகிர்ந்து
உண்மை அன்பினால்
உருவான கரு காதல்..

இதயங்கள் இட மாற
நினைவெல்லாம் நீயாக
என் சுவாசம் தொலைந்து
உனையே நேசிக்கிறேன்

என் கண்ணில் இருப்பது
கருவிழியா அல்ல நீயா
இதயம் துடிக்குதா அல்லது அங்கே
உன் பெயர் ஒலிக்குதா?

இதயத்தில் உதயமாகி
உதிரத்தில் ஊற்றெடுத்து
உடலெங்கும் பரந்தோடும்
உன் காதலால் - இவ்
உலகத்தில் வாழுது என் உயிர்.

7 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி சகோ...

Unknown said...

Nice..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி பாபு

MANO நாஞ்சில் மனோ said...

ஆதலால் காதல் செய்வீர்....!!!

-----காதல் உருகல் அருமை-----

Henry J said...

unga blog romba nalla iruku friend. kavithai romba superb


Life is beautiful, the way it is...

Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...
பகிர்விற்கு நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

பிரணவன் said...

உன் காதலால் - இவ்
உலகத்தில் வாழுது என் உயிர். . .
அருமையான வரிகள் சகோ. . .காதல் உணர்வுகளை அழுத்தமாக சொல்லியிருக்கின்றீர்கள். . .