Monday, August 22, 2011

Share

தோழியே!!!



அன்பினிலே.
தாயின் மறு உருவமானாய்
தந்தையின் பொறுப்பானாய்
அறிவுரையில் அக்காளானாய்
அதட்டுதலில் அண்ணானாய்
சம உரிமை அளித்திடும் தங்கையாய்
அறிவுரை சொல்லுகையில்
என் பாட்டி கூட - உன்னிடம்
பாடம் கற்கும் ஆசானாய்
தோழியே!!!
ஒரு உருவில் என்
குடும்பததைக் கண்டேன் உன்னில்....

காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு
பூவாய்....
பிஞ்சாய்...
காயாய்....
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே...

மாற்றம் என்பது மாறாததொன்று - இது
யாவரும் பிதற்றும் கோஷம்
வேண்டவே வேண்டாம்
மாற்றத்திற்கு புது அர்த்தம் கொடுபோம்
கை தொடுத்திடு என்னுடன்
நட்பில் ஏது வேற்றுமை
உலகிற்கே பறைசாற்றுவோம்
வெற்றி கோசம் முழங்குவோம்
இமயத்தையும் தாண்டி
விசாலமானது நம் நட்பு என்று....

16 comments:

Chitra said...

காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு

...... நேர்த்தியாக கவிதையில் சொல்லி இருக்கும் விதம், அருமை. வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கை தொடுத்திடு என்னுடன்
நட்பில் ஏது வேற்றுமை
உலகிற்கே பறைசாற்றுவோம்
வெற்றி கோசம் முழங்குவோம்
இமயத்தையும் தாண்டி
விசாலமானது நம் நட்பு என்று...//

மிக அழகிய வரிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

நட்புடன் vgk

இராஜராஜேஸ்வரி said...

கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே..//

மரணத்தைவிட கொடிய வேதனை நட்பின் பிரிவல்லவா??

குறையொன்றுமில்லை. said...

நட்பு என்றென்றும் வாழ்க.
அருமையான வரிகள்.

ஆமினா said...

//
மரணத்தைவிட கொடிய வேதனை நட்பின் பிரிவல்லவா??///

mm

ஆமினா said...

பிரிவின் வலி எத்தகையது என உணர வைத்த கவிதை!!!

அருமை

வாழ்த்துக்கள்

Harini Resh said...

//காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு//

அருமை பிரஷா
நட்பின் பிரிவு தங்க முடியாத வலிதான்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நட்பு... இனிய கவிதை...

அனைவர்க்கும் நட்பு தேவையான ஒன்று..

Prabu Krishna said...

நல்ல கவிதை தோழி.

எழுத்துப் பிழை கொஞ்சம் சரி செய்யவும். என்ன திடீர் என்று இவ்வளவு பிழைகள்?. (Newsletter தலைப்பை பார்த்து என்ன இது புது தலைப்பு என்று நினைத்தேன். )

sathishsangkavi.blogspot.com said...

//பூவாய்....
பிஞ்சாய்...
காயாய்....
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே...//

அருமையான வரிகள்...

Unknown said...

நன்று தோழி..!

Anonymous said...

அழகிய வரிகள்...
நல்ல கவிதை ...
வாழ்த்துக்கள் தோழி...

Anonymous said...

நட்பு பற்றி அழகான ,ஆழமான கவி, நல்லாய் உள்ளது .

கவி அழகன் said...

அழகிய நட்பு கவிதை

Prem S said...

nice lines

Suresh Subramanian said...

arumai.. natpin valigal...ellaiyillathathu thaan..

wwww.suresh-tamilkavithai.blogspot.com