Thursday, August 18, 2011

Share

அவன் நினைவுகள்.....


காத்திருந்து காத்திருந்து
காலங்கள் கரைந்த
ஏக்கங்களுகம் அதிகரித்த
நாடி நரம்புகள் துடிக்க
அவன் வருகைக்காய் 
காத்திருந்த - அக் கணப்பொழுதுகள்
இன்று நினைக்கையில்
இனிமையான நினைவுகள்
வலியுடன் கலந்து
புதுவித உணர்வுகளை - என்னுள்
பிறப்பிக்கின்றன இன்னும்....

நட்பில் வளர்ந்த காதல்
வீரியம் கொண்டு வளர்கையில்
என் இதயம் அகற்றி
இன்னொரு இதயம் சுமக்கையில்
பல ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒன்றையாய்
பிரகாசித்த தருணங்கள்
இன்றும் இனிக்கின்றன.

தொலைபேசியில் அழைப்பில்
சிணுக்கிடும் அவன் பெயர்
செல்லமாய் எனை அழைப்தாய்
இன்றும் ஓர் பிரமை 
என்னைச் சுற்றி....

விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்
இளமையின் துடிப்பில்
வெட்கப்படும் மனசு
பசுமையான நினைவுகள்
இன்றும் படர்கின்றன என்னில்...

16 comments:

Anonymous said...

இன்றும் ஓர் பிரமை
என்னைச் சுற்றி....

ரசித்தேன்...வாழ்த்துக்கள் தோழி...

சிந்தையின் சிதறல்கள் said...

வழமைபோல் காதலின் காத்திருப்பை ரசித்திடச்செய்தது வாழ்த்துகள் தோழி

ஆமினா said...

அழகு கவிவரிகள்

மாய உலகம் said...

//விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்
இளமையின் துடிப்பில்
வெட்கப்படும் மனசு
பசுமையான நினைவுகள்
இன்றும் படர்கின்றன என்னில்...//

காதலின் நினைவலைகளின் கடைசிநிமிடங்கள் விடியும் தருவாயில் அருமை தோழி

minty*** said...

பல ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒன்றையாய்
பிரகாசித்த தருணங்கள்
இன்றும் இனிக்கின்றன.அருமை தோழி!!!!!!!!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நினைவுகள் நீங்கா கவிதை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பசுமை நிறைந்த சுகமான கவிதை...

இராஜராஜேஸ்வரி said...

விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்//

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

புதுவித உணர்வுகளின் பிறப்பிடமே நல்ல அன்பு தான் என்பதை மெய்ப்பிக்கிறது உங்கள் கவிதை..

F.NIHAZA said...

என் இதயம் அகற்றி
இன்னொரு இதயம் சுமக்கையில்....

புதுமையான கற்பனை
அழகான வரிகள்

குறையொன்றுமில்லை. said...

அழகான வரிகளில் அருமையான கவிதை சொல்லி இருக்கீங்க.

Harini Resh said...

//விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்//

அழகான வரிகள் :)

kowsy said...

அருமையான பதிவு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

இன்றும் ஓர் பிரமை
என்னைச் சுற்றி....

விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்
இளமையின் துடிப்பில்
வெட்கப்படும் மனசு

நன்று பாரட்டுக்கள்
வாழ்க வளமுடன்

கிராமத்து காக்கை said...

பல ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒன்றையாய்
பிரகாசித்த தருணங்கள்
இன்றும் இனிக்கின்றன.

அருமையான அழகான வரிகள்
தோழி கவிதை புதுமை வாழ்த்துக்கள்

Suresh Subramanian said...

நட்பின் வேதனையை அழகாக சொல்லப்பட்டு உள்ளது.