Wednesday, January 5, 2011

Share

நட்பு....

 சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?

பக்கத்து வீட்டாருடன்
பலகாரம் பரிமாரி
பல காலம் பழகியதால்
உருவானது தான் நட்பா?

பள்ளி பருவமதில்
படிப்பதற்கு மட்டுமன்றி
பல கள்ளத்தனம் செய்ய
பாங்காளி என்ற பெயரில்
பக்கபலமாய் இருப்பதுதான் நட்பா?

பல்கலை புகுந்தவுடன்
பகிடிவதை என்ற பெயரில்
பகட்டாய் பல கதைபேசி
பல முகங்கள் இங்கே
இணைவதுதான் நட்பா?

காலம்மாறி போகையிலும்
பஸ் பயணத்தின் போதிலும்
பகல் திருவிழாவிலும்
பக்கத்தில் இருந்தனால்
ஆனாதுதான் நட்பா?

கடிதத்தில் ஆரம்பித்து
கைபேசியில் கலந்து பேசி
கணனியிலே கண் பார்த்து
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
கதை பேசி மகிழ்ந்ததனால்
மலர்ந்ததுதான் நட்பா?

காரணங்கள் பல கூறி
கலந்த பல உள்ளங்கள்
நட்பு என்னும் காவியத்தில்
இணையுது இங்கே - அதற்கு
வரையறை இல்லாது
வகுக்குதுவே இலக்கணங்கள்
சாதி மதம் பார்க்காமல்
சந்தர்ப்பம் பார்க்காமல்
தேவையென்று அறிந்ததுமே
தேடியே வந்துதவி
துன்பம் ஒன்று வருகையிலே
தோழோடு தோள் கொடுத்து
உறுதியுடன் இறுதிவரை போராடி
உறுதிமொழி பல கொடுத்து
உற்ற துணை தான் இருந்து - இவ்
உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..


57 comments:

தினேஷ்குமார் said...

மிக அருமை தோழி நட்புக்கு தொடுத்தவரிகள்

Unknown said...

நல்லா இருக்கு! உண்மை நட்பு உயிர் வாழட்டும்! :-)

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையிலும் அருமை தோழி அற்பதமான நட்பினை அற்புதமான கவிதை வடிவில் பகிர்ந்தீர் வாழ்த்துகள்

டிலீப் said...

//சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?//

அழகான வரிகள் .....
Happy Birthday - ஏ.ஆர்.ரஹ்மான்

Anonymous said...

super

Unknown said...

உண்மைதான் நட்பில்லை என்றால் எதுவுமே இல்லை

Harini Resh said...

உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே
அழகான வரிகள் ..... :)

Unknown said...

//படிப்பதற்கு மட்டுமன்றி
பல கள்ளத்தனம் செய்ய
பாங்காளி என்ற பெயரில்
பக்கபலமாய் இருப்பதுதான் நட்பா?//

நீங்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம் நட்பின் ஆரம்பத்திற்கு மட்டுமே உதவமுடியும், நிலைத்திருக்க நட்புக்கான தேடல் அருமை.நல்ல புரிதல் தான் தேவை. கவிதை அருமை.

கவி அழகன் said...

கவிதை வரிகள் அழகுடன் கருத்தையும் சொல்லுகின்றன
பந்தி பிரித்து எழுதியிருந்தால் வாசிக்க சுகமாய் இருக்கும்
வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

அருமை டா கண்ணா...ஆனால் சில எழுத்து பிழைகள் மட்டும் இருக்கு சரி பண்ணிரு...

Unknown said...

”உடுக்கை இழ்ந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு.” ஆம்உண்மையான நட்புக்கு ஈடு வேறு ஏதும் கிடையாது.

Saravanakumar said...

நட்புக்கு மரியாதை செய்துள்ளீர்கள் அருமை...

Anonymous said...

நட்பின் நிலைகளை அழகாக சொல்லியிருக்கீங்க பிரஷா :)

Chitra said...

உற்ற துணை தான் இருந்து - இவ்
உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..


...Absolutely true!!!

ஆயிஷா said...

அருமையான கவிதை.

இந்த கவிதை மூலம் நாமும்

நட்பாகலாம் தோழி பிரஷா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

fantastic poem.ur question is which is friendship? - i think the all you mentioned are the characters of friendship

சுஜா கவிதைகள் said...

நட்பின் அழகை அழகாய் உணர்ந்து அழகாய் கவிதை வடித்து உள்ளீர்கள் ....நல்ல கவிதை ...நட்புடன் சுஜா

'பரிவை' சே.குமார் said...

மிக அருமை.

எம் அப்துல் காதர் said...

//பல்கலை புகுந்தவுடன்
பகிடிவதை என்ற பெயரில்
பகட்டாய் பல கதைபேசி
பல முகங்கள் இங்கே
இணைவதுதான் நட்பா?//

பழையதை நினைத்துப் பார்க்க வைத்த வரிகள்!!

நிலாமதி said...

உண்மை நட்பு உயிர் உள்ளவரை உறவாடும்.
நல்ல பகிர்வு பாராட்டுக்கள்.

logu.. said...

சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
CUTTING VACHU சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?


Ha..Ha.. Ha.. soooopernga.

சிவரதி said...

உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..
நல்ல பெற்றேர்கள் கிடைப்பது நம் விதி
நல்ல நட்பு கிடைப்பது நம் மதி
நல்ல நட்புக்கில்லை என்றும் முற்றுப்புள்ளி.......

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நட்பிற்கான கவிதை.. நல்ல வரிகளில்....! :-)

Philosophy Prabhakaran said...

மிகவும் நன்று நண்பா,... தங்களது உதவி தேவைப்படுகிறது... என்னுடைய பிரபல இடுகைகளை slideshow வைக்க விரும்புகிறேன்... அதாவது ஒரு புகைப்படம், கீழே அந்த இடுகைக்கான இணைப்பு இரண்டும் இருக்க வேண்டும்... அந்த மாதிரி ஒரு custom slide show வடிவமைக்க வழி இருந்தால் சொல்லுங்களேன்...

குறையொன்றுமில்லை. said...

நட்புக்கு இதைவிட உயர்வாய் யாராலும் சொல்லமுடியாது. நானும் நட்புக்கு மறியாதை என்கிர தலைப்பில் ஒரு பதிவு போட்டுள்ளேன். ஆனா அதுவேற.:)

ஆமினா said...

கவிதை அருமைங்க

Paul said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை.. எல்லா வரிகளையுமே ரசித்தேன்.. சூப்பர்..

சிவகுமாரன் said...

நட்புக்கு இணை இல்லை.
நல்ல கவிதை . பாராட்டுக்கள்.

"தாரிஸன் " said...

ஆமா...இந்த மாதிரி நட்பெல்லாம் இப்ப இருக்கா என்ன...??
ANYWAY கவிதை நல்லா இருக்கு....
பாராட்டுக்கள்....
பாராட்டுக்கள்....

smilzz said...

Beautiful poetry but real words from heart

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@dineshkumar நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம் நன்றி ஹாசிம்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha நன்றி தர்ஷா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம் உண்மை.. நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... நன்றி பாரதிஃஃஃ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன் நன்றி யாதவன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. சரி பண்ணிட்டன் அக்கா.. நன்றி அக்கா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இனியவன் உண்மை.. நன்றி இனியன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tms.blogspot.com நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Balaji saravana நன்றி சகோதரா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்ரா அக்கா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆயிஷா நட்பாகலம் ஆயிஷா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rajeevan நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சுஜா கவிதைகள் மிக்க நன்றி சுஜா அக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு மிக்க நன்றி பாபு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அன்பரசன் நன்றி அன்பரசன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivarathy நல்ல நட்புக்கில்லை என்றும் முற்றுப்புள்ளி....... உண்மை.. நன்றி சிவரதி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) மிக்க நன்றி ஆனந்தி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaran நன்றி பிரபா.. முயற்சித்து பார்த்து உங்களுக்கு மின்னஞ்சலில் பதில் அனுப்புகின்றேன்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா நன்றி ஆமினா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] நன்றி பால்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சிவகுமாரன் நன்றி சிவகுமாரன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@"தாரிஸன் " இல்லை தாரிசன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி சகோ....

Mady said...

superb!!!! நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது
ஆனால் ஒரு நல்ல நண்பனின்
மௌனம் இதயத்தில் அதிக கண்ணீரை ஏற்படுத்தும்.....!